Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மாமியாரின் விரல்களைக் கடித்த மருமகள்... தடுக்க போன கணவனுக்கும் அடி.. என்ன ரீசன்னு கேட்டீங்கனா கடுப்பாகிடுவீங்க...

Gowthami Subramani September 08, 2022 & 16:50 [IST]
மாமியாரின் விரல்களைக் கடித்த மருமகள்... தடுக்க போன கணவனுக்கும் அடி.. என்ன ரீசன்னு கேட்டீங்கனா கடுப்பாகிடுவீங்க...Representative Image.

மகாராஷ்டிரா மாநிலத்தில் மாமியாரின் விரல்களைக் கடித்த மருமகள் செய்திதான் இன்றைய டாப் இந்தியா செய்தி. மாமியாரோட விரல்களை கடிக்குற  அளவுக்கு மருமகள கொடூரமா ஆகியிருக்காங்கன்னா அப்ப மாமியார் என்ன பண்ணிருப்பாங்கன்னு யோசிக்கிறீங்களா? நாங்களும் அததான் யோசிச்சோம். அப்படி என்ன காரணம்னு தேடிப்படிக்குறப்பதான் ஷாக். என்ன காரணம் கேட்டா நீங்களே கடுப்பாகிடுவீங்க. முழுசா தெரிஞ்சிக்கோங்க.

 மகராஷ்டிரா மாநிலத்தில் அமைந்துள்ளது அழகிய தானே மாவட்டம். மகாராஷ்டிர தலைநகர் மும்பைக்கு மிக அருகே இருக்கும் மாவட்டம் என்பதாலும், மும்பையில் வேலை பார்ப்பவர்கள் அதிகம் வசிக்கும் மாவட்டம் என்பதாலும் கூடுதல் சிறப்பு பெறுகிறது.

இந்த மாவட்டத்தில் வசித்து வரும் ஒரு குடும்பத்தில் தான் இந்த கூத்து நடந்துள்ளது. இந்த பகுதியிலுள்ள ஒரு வீட்டில்,  32 வயது இளம் பெண், தனது மாமியாரின் மூன்று விரல்களைக் கடித்து துப்பியதாகக் கூறியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் வசித்து வரும் 32 வயது பெண், ஆத்திரத்தில்  தனது மாமியாரின் மூன்று விரல்களைக் கடித்துள்ளார்.

அந்த பெண்ணின் பெயர் விஜயா குல்கர்னி. இவரது மாமியார்  விருஷாலி. சம்பவத்தன்று மருமகள் விஜயா,  தனது மாமியார் விருஷாலியின் மூன்று விரல்களைக் கடித்து விட்டாராம்.

மாமியார் விருஷாலி சம்பவம் நடந்த சமயத்தில் பூஜை செய்துகொண்டிருந்திருக்கிறார். பக்தி மயத்தில் கடவுளை வேண்டி பஜனை பாடல்களை வாசித்துக் கொண்டிருந்த சமயத்தில், விஜயா குல்கர்னி தொலைக்காட்சி பார்க்க விரும்பியுள்ளார். 

வழக்கம்போல எல்லார் வீட்டிலும் நடக்கும் காட்சிதான். டிவியை அணை என எத்தனை முறை கூறியும் மருமகள் கேட்கவில்லை போலும். கோபத்தின் உச்சிக்கே சென்ற மாமியார் விருஷாலி, வேகமாக சென்று டிவி பெட்டியை அணைத்திருக்கிறார். இதனால் கடும் கோபத்துக்கு ஆளாகியிருக்கிறார் மருமகள். 

 பொறுமை இழந்த மருமகள் விஜயா மாமியாருடன் சண்டைக்கு போயிருக்கிறார். அவர்களுக்கிடையே பெரிய வாக்குவாதம் நடந்துள்ளது. இவ்வாறு வாக்குவாதம் தொடர்ந்து நடைபெற்றிருந்த நேரத்தில் அந்தப் பெண், மாமியாரின் கையைப் பிடித்து மூன்று விரல்களைக் கடித்ததாகக் கூறப்படுகிறது.

தனது தாயைத் தாக்கி அவர் விரல்களைக் கடித்த நிலையில்,  விஜயாவை அவருடைய கணவர் தடுக்க முயன்றிருக்கிறார். நியாயம் கேட்கச் சென்ற தனது கணவரையும் அவர் அறைந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இது குறித்து மாமியார் சிவாஜி நகரில் புகார் அளித்துள்ளார். இந்தச் செய்தி சிவாஜி நகர் காவல் நிலைய அதிகாரியை மேற்கொள் காட்டி வெளியிடப்பட்டுள்ளது. 

ஆனால், இதுகுறித்த உண்மைத் தகவல் தற்போது வெளிவந்துள்ளது. மாமியார் விரல்களைக் கடித்து துப்பிய மருமகள் என வியாபாரத்திற்காக பலரும் செய்தி வெளியிட்டுள்ளனர். உண்மையில் வாக்குவாதம், சண்டைக்காகவே புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. விரல்களை யாரும் கடித்து துப்பவில்லை. கடிக்க முயன்றது  உண்மை ஆனால், விரல்கள் துண்டிக்கப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்