மும்பை புறநகர் அந்தேரியில் வசிக்கும் 49 வயது பெண் ஒருவர், தீபாவளிக்காக ஞாயிற்றுக்கிழமை உணவு டெலிவரி ஆப்பில் ரூ.1000/-க்கு இனிப்புகளை ஆர்டர் செய்துள்ளார். பிறகு பணத்தை செலுத்த முயன்ற போது பரிவர்த்தனை நடைபெறாமல் போனது. அதனால் இனிப்பு ஆர்டர் செய்த கடைக்கு போன் செய்துள்ளார், அந்த பக்கத்தில் இருப்பவர் இவரின் கிரெடிட் கார்டு எண்ணையும், போனுக்கு வந்த OTP-யும் கூறுமாறு கேட்க, இவரும் கூறியுள்ளார்.
அடுத்த சில நிமிடங்களில் இவரின் அக்கவுண்டில் இருந்து ரூ. 2,40,310/- பணம் எடுக்கப்பட்டது. அதிர்ச்சி அடைந்த அந்த பெண், உடனடியாக ஓஷிவாரா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். உடனே நடவடிக்கை எடுத்ததால் அந்த பெண்ணின் அக்கவுண்டை ட்ராக் செய்யும் போது, மற்ற அக்கவுண்டிற்கு ரூ. 2,27,205/- பணம் மாற்றப்படுவதை தடுத்து நிறுத்தினர். எனவே, இழந்த பணத்தின் பெரும் பகுதியை அந்த பெண் காப்பாற்றியுள்ளார், மேலும் விசாரணை நடைபெறுவதாக கூறுகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…