Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

படுகாயங்களுடன் உதவி கேட்கும் சிறுமி… அதை வேடிக்கை பார்த்து வீடியோ எடுத்த மக்கள் கூட்டம்….!

Gowthami Subramani October 25, 2022 & 18:45 [IST]
படுகாயங்களுடன் உதவி கேட்கும் சிறுமி… அதை வேடிக்கை பார்த்து வீடியோ எடுத்த மக்கள் கூட்டம்….!Representative Image.

உடல் முழுவதும் படுகாயங்களுடன் கூடிய சிறுமி, தனக்கு உதவுமாறு கையை நீட்டிக் கெஞ்சிக் கொண்டிருக்கும் போது அதை சுற்றி நிற்பவர்கள் தங்களின் செல்போனில் வீடியோ எடுத்துக் கொண்டிருக்கும் காட்சி அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

உத்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள கனோஜ் மாவட்டத்தில் ஞாயிற்றுகிழமை 13 வயது சிறுமி வீட்டை விட்டு காணாமல் போனதாகக் கூறப்படுகிறது. இந்த சிறுமி அரசு விருந்தினர் மாளிகைக்கு அருகில் தலை உட்பட உடலில் பல இடங்களில் காயங்களுடன் இருந்தவாறு கண்டுபிடிக்கப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் 25 நொடிகளாக வீடியோ வெளியானது. இந்த வீடியோவில் சிறுமி ரத்தக் காயங்களுடன், அவரது கைகளை நீட்டி தன்னை சுற்றி இருக்கும் கூட்டத்தை நோக்கி உதவி கேட்கிறார். ஆனால், சிறுமியைச் சுற்றி நிற்கக் கூடிய ஆண்கள் அந்த சிறுமிக்கு உதவாமல், அவரைக் காப்பாற்ற எந்த முயற்சியையும் எடுக்காமல் செல்போனில் அவரைப் படம் எடுப்பதிலேயே குறியாய் இருந்துள்ளனர்.

மேலும், இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விட்டதா? போலீஸ் உயர் அதிகாரியின் எண் என்ன என்றும் சிலர் விசாரித்தனர். இருப்பினும், சிறுமிக்கு உதவ யாரும் முன்வரவில்லை. பிறகு அந்த இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அந்த சிறுமியைத் தூக்கி வேகமாக ஆட்டோவை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் காட்சியும் வீடியோவாக வெளியானது.

இது குறித்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் குன்வர் அனுபம் சிங் தெரிவித்ததாவது, “படுகாயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்ட சிறுமியை போலீசார் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை உண்டியல் வாங்குவதற்காக வெளியே சென்ற சிறுமி வீடு திரும்பவில்லை. இந்நிலையில், அரசு விருந்தினர் மாளிகை அருகே சிறுமி ஒருவர் வலியால் துடிப்பதைப் பார்த்த மாளிகை காவலாளி உடனடியாக காவல்துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளார். மேலும், அந்த சிறுமியும் இளைஞர் ஒருவரும் வந்தது விருந்தினர் மாளிகை கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது” என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து, இளைஞர் யார் என விசாரணை நடைபெற்று சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு தள்ளப்பட்டுள்ளாரா என்பது தெரியவில்லை. இது மருத்துவர்களின் அறிக்கைக்கு பின்னரே உறுதி செய்யப்படும் எனவும் தெரிவித்தார். மேலும், சிறுமி மேல் சிகிச்சைக்காக கான்பூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். சிறுமியின் இந்த நிலையறிந்த பெற்றோர் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்