உலக வங்கி அமைப்பு வெளியிட்டுள்ள அதிர்ச்சிகரமான தகவல் என்னவென்றால், தற்போது உலக வங்கியின் தலைவரான டேவிட் மல்பாஸ் தனது பதவிக்காலம் முடிவதற்கு ஒரு வருடத்திற்கு முன்னதாக பதவி விலக திட்டமிட்டுள்ளதாக நேற்று புதன்கிழமை அறிவித்தது.
வறுமையில் இருக்கும் நாடுகளுக்கு உதவும் வகையில்187 நாடுகளால் உருவான அமைப்பு தான் இந்த உலக வங்கி. வளரும் நாடுகளுக்கு வறுமையைக் குறைக்க உதவும் வகையில் கடன் வழங்குகிறது. முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 2019 ஆம் ஆண்டு உலக வங்கியின் தலைவராக மால்பாஸை ஐந்தாண்டு காலத்திற்கு நியமித்தார். உலக வங்கியின் மிகப்பெரிய பங்குதாரராக அமெரிக்கா இருப்பதால் பாரம்பரியமாக அதன் அதிபரை நியமிக்கிறது.
மால்பாஸின் பதவிக் காலத்தில், உலகளாவிய தொற்றுநோய் மற்றும் உக்ரைனில் ரஷ்யாவின் போர் உட்பட பல நெருக்கடியான சமயங்களில் மிகச் சிறப்பாக பணியாற்றியுள்ளார். பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதற்கும், அரசின் கடன் சுமைகளைக் குறைப்பதற்கும், வறுமையைக் குறைப்பதற்கும் அவர் கொள்கைகளிலும் கவனம் செலுத்தினார்.
இப்படி இருக்கையில் நேற்று திடீரென அவர் உலக வங்கியின் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்கிறேன் என்று கூறியது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இது குறித்து அவர் கூறுகையில், " உலகின் முதன்மையான மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவராக பணியாற்றுவது ஒரு மகத்தான மரியாதை மற்றும் பாக்கியம் என்றுள்ளார். வளர்ந்து வரும் நாடுகள் முன்னோடியில்லாத நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள நிலையில், வேகம், அளவு, புதுமை மற்றும் தாக்கத்துடன் வங்கி குழு பதிலளித்ததில் நான் பெருமைப்படுகிறேன்" என்றும் தெரிவித்துள்ளார்.
உலக வங்கியின் நிதியாண்டின் இறுதியில் ஜூன் 30 அன்று தனது பதவியை விட்டு விலகுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…