இந்தியாவில் நேற்று ஒடிசா மாவட்டத்தில் நடந்த ரயில் விபத்தில் இதுவரை 288 பேருக்கு மேல் உயிரிழந்த சம்பவம் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹனகா பஜார் நிலையம் அருகே மூன்று ரயில்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதிக்கொண்டு விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்து நடந்த சிறிது நேரத்தில் மீட்பு படையினர் அங்கே வந்து விபத்தில் சிக்கிக்கொண்டிருக்கும் மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அன்று இரவு தொடங்கி அடுத்த நாள் வரையில் அயலாது மக்களை மீட்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டனர். அதில் 288 பேர் உயிரிழந்ததாகவும், 1000-க்கும் மேற்பட்டோர் பலத்த காயத்துடன் உயிர் தப்பியதாக கூறப்படுகிறது.
இந்த கொடுமையான சம்பவம் இந்தியாவிற்கு மட்டும் இல்லாது உலக நாடுகளுக்கும் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் நடந்த ரயில் விபத்தில் உயிரிழந்த மக்களுக்கு உலக நாடுகளில் இருந்து அரசியல் தலைவர்கள் தங்களின் அனுதாபங்களை தெரிவித்தனர். அவர்கள் யார் என்று பார்க்கலாம்.
பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், சீன அதிபர் ஜி ஜின்பிங், சீன பிரதமர் லீ கியாங், திபெத்திய ஆன்மிக தலைவர் தலாய் லாமா, ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, உர்சுலா வான். டெர் லேயன், ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர், பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஆகியோர் இந்தியாவிற்கு தங்களின் ஆதரவையும், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தங்களின் வருத்தத்தையும் தெரிவித்தனர்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, "ஒடிசாவில் நடந்த ரயில் விபத்துக்கு உலகத் தலைவர்களின் இரங்கல் செய்திகளால் ஆழ்ந்த உணர்வு ஏற்பட்டது. தங்களின் அன்பான வார்த்தைகள், துயருற்றிருக்கும் குடும்பங்களுக்கு வலிமை தரும். தங்களின் ஆதரவிற்கு நன்றி" என்று அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…