பிரேசிலில் நடந்த அழகிப் போட்டியில், இரண்டாம் இடத்தை பிடித்த போட்டியாளரின் கணவன் முதல் இடம் பெற்ற வெற்றியாளரின் கிரீடத்தை பிடுங்கி உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மே 27 ஆம் தேதி பிரேசிலில் மிஸ் கே மாட்டோ க்ரோஸ்ஸோ 2023 நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளில் இருந்தும் போட்டியாளர்கள் வந்து கலந்துக் கொண்டனர். போட்டியின் இறுதியில் இமானுவெல்லி பெலினி என்பவரை வெற்றியாளராக அறிவித்தனர். அவருக்கு கிரீடத்தை வைத்து கொண்டாடும் தருணத்தில் திடீரென ஒருவர் மேடைக்கு வந்து அந்த கிரீடத்தை பிடுங்கி கீழே எறிந்துள்ளார். அது வேறு யாரும் இல்ல, இரண்டாம் இடத்தைப் பிடித்த நத்தலி பெக்கர் என்பவரின் கணவர்.
தனது மனைவிக்கு முதல் இடம் கிடைக்கவில்லை என்ற கோபத்தில் இப்படி நடந்துகொண்டார் என்று கூறப்படுகிறது. அவரை மேடையில் இருந்து வெளியேற்ற செக்யூரிட்டி வந்த போது, மீண்டும் ஆக்ரோஷத்தில் அந்த நபர் கிரீடத்தை எடுத்தி யாருக்கும் தர கூடாது என்று முடிவு செய்து அடித்து நொறுக்கத் தொடங்கினார். இந்த சம்பவம் வீடியோவாக தற்போது சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. மேலும் இரண்டாம் வெற்றியாளர் நத்தலி பெக்கர் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் நான் இரண்டாம் இடம் பெற்றதை பெருமிதமாக நினைக்கிறன். என்ன தான் கணவன் மனைவியாக இருந்தாலும், அவரவர் செயல்களுக்கு அவர்கள் தான் பொறுப்பு என்றும் கூறியுள்ளார்.
இது குறித்து ஒரு ஊடக அறிக்கையில், போட்டி ஒருங்கிணைப்பாளர் மலோன் ஹெனிஷ், வெற்றியாளரை அறிவிப்பதற்கான நடுவர் மன்றத்தின் முடிவு நியாயமானது மற்றும் இறுதியானது என்று கூறினார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…