நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரத்தில் அத்தனூர் பகுதியில் கடை ஒன்றில் வாடிக்கையாளர் 10 ரூபாய் கூல் ட்ரிங் பாட்டிலை வாங்கியுள்ளார். அப்போது அதில் எதோ மிதந்துகொண்டு இருந்துள்ளது, அதனை திறந்து பார்த்த அவருக்கு அதில் புழுக்கள் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இதுகுறித்து கடைக்காரரிடம் முறையிட போது இதற்கு நாங்கள் பொறுப்பு ஆக முடியாது இதனை வாங்கி விற்பது மட்டுமே எங்கள் வேலை, இதுகுறித்து கேள்வி கேட்கவேண்டுமானால் ஏஜெண்டுகளிடம் கேளுங்கள் என கூறியுள்ளார். அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர் காலாவதியான கெட்டுப்போன குளிர்பானங்களை வாங்கி மக்கள் குடிப்பதனால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படலாம். உணவு பாதுகாப்பு துறை இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…