டப்பிங் கலைஞராக இருந்து நடிகராக தமிழ் சினிமாவில் பல வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகர் விக்ரம்.
ரிஸ்க் எடுப்பது எனக்கு ரஸ்க் சாப்பிடுவது போல் என்பதை போல் நினைத்துக்கூட பார்க்கமுடியாத பல சாதனைகளை தமிழ் சினிமாவில் படைத்துள்ளார். அப்படி சேது, பிதாமகன், காசி, ஐ, போன்ற வித்தியாசமான படங்களில் அடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் விக்ரம்.
தற்போது கோப்ரா, பொன்னியின் செல்வன் ஆகியப் படங்களில் நடித்து முடித்து கொடுத்திருக்கிறார். இரண்டு படங்களும் வெகுவிரைவில் திரைக்கு வர உள்ளன. இதில் கோப்ரா படத்தில் விக்ரம் 20 கெட்டப்புகளில் இவரது கேரக்டர் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மறுபுறம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஆதித்ய கரிகாலனாக நடித்துள்ளார் விக்ரம்.
இந்நிலையில் நடிக விக்ரமுக்கு 2 நாட்களுக்கு முன்னர் லேசான நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது திரையுலகினர் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. இதனையடுத்து அனைவரும் அவர் விரைவில் நலம் பெற வேண்டும் என ரசிகர்கள் பிராத்தனை செய்தனர்.
அவருக்கு மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருக்கு மாரடைப்பு இல்லை, அவரின் உடல்நிலை சீராக இருக்கிறது. விரைவில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்” எனத் தெரிவித்திருந்தது. இந்நிலையில், உடல்நலம் குணம் அடைந்து நடிகர் விக்ரம் வீடு திரும்பியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விக்ரமின் ரசிகர்களும், நலன் விரும்பிகளும் வாழ்த்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…