உத்தரப் பிரதேச மாநிலம் கேசர்கஞ்ச் பகுதியில் கோதியா கிராமத்தை சேர்ந்தவர் பிரதாப் யாதவ் (22). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த புஷ்பா தேவி (20) என்ற இளம் பெண்ணுக்கும் கடந்த மே 30ம் தேதி கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. பின்னர், அடுத்த நாளான மே 31ம் தேதி ஊர்வலமாக புதுமண தம்பதி வீட்டிற்கு வந்த நிலையில், அன்றிரவு இருவருக்கும் முதலிரவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தம்பதி இருவரையும் மகிழ்ச்சியுடன் முதலிரவு அறைக்கு அனுப்பி வைத்த உறவினருக்கு, அடுத்த நாள் காலை பேரதிர்ச்சி காத்திருந்தது. அதாவது, ஜூன் 01 ஆம் தேதி விடிந்து நீண்ட நேரம் ஆகியும் இருவரும் வெளியே வரவில்லை. இதனால், சந்தேகப்பட்ட உறவினர்கள் கதவை தட்டிப் பார்த்து திறக்கவில்லை என்பதால் கதவை உடைத்து அறைக்குள் சென்றனர். உள்ளே பிரதாப் மற்றும் அவரது மனைவி புஷ்பா இருவரும் பேச்சு மூச்சின்றி சடலமாக இருந்தனர். உறவினர்களுக்கு அதிர்ச்சி ஏற்படவே இருவரையும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் இறந்துவிட்டதை உறுதி செய்தனர். ஜோடி இருவரின் உடலிலும் எந்த காயமும் இல்லாத நிலையில், பிரதேச பரிசோதனை செய்யப்பட்டது. அதில், தம்பதி இருவரும் மாரடைப்பால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.
அதன்படி விசாரணை செய்ததில் தம்பதிக்கு முதலிரவு நடந்த அறை காற்றோட்டம் இல்லாத அறை என்பதால் மூச்சு திணறல் ஏற்பட்டு மாரடைப்புக்கு காரணமாக இருந்திருக்காலம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜோடி இருவருக்கும் ஒன்றாக இறுதி சடங்கு செய்யப்பட்டது அடக்கம் செய்யப்பட்டது. இச்சம்பவம் காவல்துறை கவனத்திற்கு சென்ற நிலையில், புதுமண ஜோடி தங்கியிருந்த இடத்தில் தடயவியல் சோதனை நடத்தப்பட்டு, அவர்கள் சாப்பிட்ட உணவுகள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…