‘Untalented Guy’ என்னும் யூடியூப் சேனலின் சொந்தக்காரர் உதித் நாயக் தனது சேனலில் கமெண்ட் செய்த இருவரை கொன்றதாக கைது செய்யப்பட்டார்.
கடந்த புதன்கிழமை நடந்த துப்பாக்கி சூடு சம்பவமாக யூடியூபர் உதித் நாயக் உடன் சேர்ந்து 5 பேரும் ஞாயிற்றுக்கிழமை அன்று தொழில்துறை எஸ்டேட் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடம் இருந்து இரண்டு கைத்துப்பாக்கிகள், இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 7 மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த கொடூர நிகழ்வு நடைபெற்றதற்கான காரணம்? உதித் நாயக் தவறான மொழியை பயன்படுத்தி அதனை கலாய்க்கும் வகையில் வீடியோக்களை தனது ‘Untalented Guy’ என்னும் யூடியூப் சேனலில் போஸ்ட் செய்து வந்துள்ளார். அவரின் சேனலுக்கு சுமார் 690k சந்தாதாரர்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் அவரின் சேனலில் இரண்டு இளைஞர்கள் கமெண்ட் செய்துள்ளனர். இதனால் அவர்களுக்கும் உதித்-க்கும் இடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது.
கடுப்பான உதித் நாயக் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து அந்த இரண்டு பேரையும் சூட்டுக் கொலை செய்ய முயன்றுள்ளனர். இந்த கொடூர சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் டன்ஹர்பூரைச் சேர்ந்த பிங்கு தாஸ் மற்றும் நியாபாக் பகுதியைச் சேர்ந்த ஆத்மி குமார் தாஸ் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் படுகாயம் அடைந்ததாக காவல் துறையினர் கூறுகின்றனர். இதற்கு காரணமான உதித் நாயக் மற்றும் அவரின் நண்பர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் உதித் நாயக்கின் வங்கிக் கணக்கை முடக்கியுள்ளனர் மற்றும் அவரது யூடியூப் சேனலும் முடக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…