கர்நாடகா மாநிலத்தில் திருமணமான பெண்ணை இளைஞர் ஒருவர் காதல் வலையில் வீழ்த்த தொடர் முயற்சியில் ஈடுபட்டிருந்த நிலையில், பெண்ணின் அண்ணனால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவின் பெங்களூரு நகரில் உள்ள பீதர் நகரில் வசித்துவரும் அமீர்கான் என்ற இளைஞர் அங்குள்ள பல்பொருள் அங்காடியில் வேலைபார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த கடைக்கு வரும் திருமணமான பெண்ணை தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு அடிக்கடி தொந்தரவு செய்துவந்துள்ளார். தொடர்ந்து அந்த இளைஞரின் தொல்லை அதிகரிக்கவே அப்பெண் தனது அண்ணன் ஜீசன் என்பவரிடம் இதுபற்றி கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஜீசன் அமீர்கான் வேலை செய்யும் பல்பொருள் அங்காடிக்கு நேரில் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது அவர் கையில் கத்தி ஒன்றை மறைத்துவைத்து எடுத்து சென்றுள்ளார். இதனைப்பார்த்த அமீர்கான் அங்கிருந்து நழுவி கடையின் உள் சென்றுள்ளார், அவரின் பின்னல் சென்ற ஜீசன் அமீர்கானை சரமாரியாக கத்தியில் குத்திவிட்டு அங்கிருந்தது தப்பி சென்றுள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அங்குவந்து பார்த்தபோது அமீர்கான் ரத்தவெள்ளத்தில் உயிரிழந்து கிடந்துள்ளார். அவரது உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், அங்குள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து ஜீசனை போலீசார் கைதுசெய்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…