கர்நாடக மாநிலம் பெங்களூரு நாகர்பாவியில் ரேபிட் ஃபிட்னஸ் உடற்பயிற்சி கூடம் செயல்பட்டு வருகிறது. இந்த உடற்பயிற்சி கூடம் சார்பில் மாநில அளவிலான கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 10-ந் தேதி நடைபெற்றது. இந்த போட்டியில் மைசூரை சேர்ந்த நிகில் (23) என்பவர் கலந்து கொண்டார்.
அப்போது நிகிலுக்கும் மற்றொரு வீரருக்கும் போட்டி நடைபெற்றது. இதில் எதிராளி தாக்கியதில் நிகில் நிலை குலைந்து கீழே விழுந்தார். உடனடியாக போட்டி ஏற்பாட்டாளர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு வைத்து அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதில், போட்டி ஏற்பாட்டாளரின் அலட்சியத்தால் தங்கள் மகன் இறந்ததாக புகார் அளித்துள்ளனர். மேலும், போட்டி நடைபெறும் இடத்தில் மருத்துவர்கள், ஆம்புலன்ஸ் என எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் இல்லை என தெரிவித்தனர்.
இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், போட்டி ஏற்பாட்டாளர் நவீன் ரவிசங்கர் தலைமறைவாகி உள்ளார்.ரேபிட் ஃபிட்னஸ் அரங்கில் நடைபெற்று கொண்டிருந்த கிக் பாக்சிங் போட்டியில் வீரர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…