ரயிலில் இருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவர், இறப்பதற்கு 2 தினங்களுக்கு முன்பாக நண்பர்க்ளுடன் சாகசம் செய்த பரபரப்பான வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. இரண்டு தினங்களுக்கு முன்பாக மாநிலக் கல்லூரி மாணவன் நீதிதேவன்(19) சென்னையிலிருந்து அரக்கோணம் நோக்கி சென்ற மின்சார ரயிலில் வந்து கொண்டு இருந்தார். அப்போது ரயில் திருவள்ளூர் அருகே கொண்டிருந்தபோது செவ்வாப்பேட்டை - வேப்பம்பட்டு இடையே ரயில் தண்டவாளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தார்.
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், ரயிலில் இருந்து தவறி விழுவதற்கு முன்பாக ரயிலில் சக நண்பர்களுடன் இணைந்து அவர் சாகசம் செய்த பழைய வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. அதில் ரயில் படிகளில் தொங்கியபடி அவர் செய்த சாகச வீடியோ வைரலாகி வருகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…