Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

எமனாக மாறிய ஆன்லைன் ரம்மி; இளைஞர் தூக்கிட்டு தற்கொலை! 

Kanimozhi Updated:
எமனாக மாறிய ஆன்லைன் ரம்மி; இளைஞர் தூக்கிட்டு தற்கொலை! Representative Image.

ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த தற்கொலை செய்து கொள்வது தமிழகத்தில் தொடர் கதையாக மாறியுள்ளது. 

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே காட்டு வேப்பிலை பட்டி ஊராட்சி பகுதியில் உள்ள சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலை அருகே பஞ்சுமாயி அம்மன் கோவில் பகுதியில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். 

அப்போது தற்கொலை செய்து கொண்டவர் சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டம் பாகல்பட்டி பகுதியைச் சேர்ந்த மணிமுத்து என்பதும்,  சேலம் தனியார் எலக்ட்ரானிக்ஸ் கடையில் வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது. 

ஆன்லைன் சூதாட்டமான ரம்மி விளையாடி, அதில் அதிகமான தொகையை இழந்ததாக தெரிகிறது. இதனால் மன விரக்தியில் இருந்த மணிமுத்து, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.  


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்