ராமநாதபுரம் மாவட்டத்தில் குரூப் 1 தேர்வு எழுதுவதாக கூறி சென்ற இளைஞர் சடலமாக வீடு திரும்பியது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன்(30) என்ற இளைஞர் நேற்று காலை டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்காக ராமநாதபுரத்துக்கு அரசு பேருந்தில் சென்றுள்ளார். அப்போது கூட்ட நெரிசலால் படிக்கட்டில் பயணித்த கோபால கிருஷ்ணன், சத்திரக்குடி சுங்கச்சாவடி கம்பத்தில் மோதி கீழே விழுந்து படுகாயமடைந்தார்.
இதையடுத்து அருகில் இருந்தவர்கள் கோபாலகிருஷ்ணனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கோபால கிருஷ்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கோபாலகிருஷ்ணனுடன் அவரது சகோதரி ஒருவரும் அதே பஸ்ஸில் குரூப் 1 தேர்வு எழுத சென்றுள்ளார். இருவரும் இருக்கையில் அமர்ந்திருந்த நிலையில், ஒரு நிறுத்தத்தில் பஸ்ஸில் ஏறிய கர்ப்பிணிக்கு இடம் கொடுப்பதற்காக கோபால கிருஷ்ணன் இருக்கையில் இருந்து எழுந்து படிக்கட்டில் பயணித்தபோது தான் இந்த விபத்து நடந்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…