கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தின் மூன்று பஞ்சாயத்துகளில் பறவைக்காய்ச்சல் பாதிப்பால் 6,000 க்கும் மேற்பட்ட பறவைகள் அழிக்கப்பட்டன.
கோட்டயம் மாவட்டத்தில் உள்ள வேச்சூர், நீண்டூர் மற்றும் ஆர்ப்பூக்கரை ஆகிய ஊராட்சிகளில் நேற்று மொத்தம் 6,017 பறவைகள், பெரும்பாலும் வாத்துகள் கொல்லப்பட்டதாக மாவட்ட நிர்வாகத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெச்சூரில் 133 வாத்துகளும், 156 கோழிகளும், நீண்டூரில் 2,753 வாத்துகளும், ஆர்ப்பூக்கரையில் 2,975 வாத்துகளும் அழிக்கப்பட்டன.
இதற்கிடையில், கேரளாவில் பறவைக் காய்ச்சல் பரவி வருவதால், அங்கிருந்து கோழிகளை தங்கள் பகுதிக்கு கொண்டு வருவதற்கு லட்சத்தீவு நிர்வாகம் தற்காலிகமாக தடை விதித்துள்ளது.
கேரளாவில் சமீப காலங்களில் பறவைகள் இவ்வளவு பெரிய அளவில் கொல்லப்படுவது இது இரண்டாவது முறையாகும். ஆலப்புழா மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் நோய் பரவியதைத் தொடர்ந்து, ஆலப்புழா மாவட்ட நிர்வாகம் அக்டோபர் மாதம் 20,0000 பறவைகளை மாவட்டத்தில் உள்ள ஹரிபாட் பகுதியில் அழித்தது.
ஹரிபாடில் ஏற்பட்டுள்ள இந்த நோய் தாக்குதலால் விவசாயிகள் சுமார் 1,500 வாத்துகளை இந்த நோயால் இழந்துள்ளனர்.
இந்த ஆண்டு நவம்பரில், செருதானா கிராம பஞ்சாயத்தில் பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கால்நடை வளர்ப்புத் துறையின் விரைவு நடவடிக்கை குழுக்கள் கிட்டத்தட்ட 6,000 வாத்துகளை அழித்தனர். வாத்துகள் உட்பட பத்து வகையான பறவைகள் வைரஸின் ஹாட்ஸ்பாட்டின் ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் அழிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பறவைக் காய்ச்சல் என்பது இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்களால் ஏற்படும் தொற்று காரணமாக ஏற்படும் மிகவும் தொற்றக்கூடிய ஜூனோடிக் நோயாகும். H5N1 அல்லது H5N8 பொதுவாக பறவைக் காய்ச்சல் என்று அழைக்கப்படுகிறது, இருப்பினும் இதில் பல மாறுபாடுகளும் பரவலாக உள்ளன. பறவைகளின் கழிவுகள், சுரப்பு மற்றும் உமிழ்நீர் மூலம் இந்த தொற்று பரவுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…