நமக்கு பெரும்பாலும் தெரிந்த பழங்களுள் ஒன்று தான் இந்த அத்திப்பழம். அதிக சுவையும், ஏராளமான ஊட்டச்சத்தும் நிறைந்துள்ள இந்த அத்திப்பழத்தினை தொடர்ந்தது நாம் சாப்பிடுவதால் நமது உடலில் உள்ள பல வகையான ஆரோக்கிய பிரச்சனைகள் குணமடையும். இந்த அத்திப்பழம் பார்ப்பதற்கு கூம்பு வடிவில் இருக்கும். அதிலும், உலர்ந்த அத்திபழத்தை காலை நேரத்தில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதனால் நாம் நிறைய நன்மைகளை பெறலாம். அவை என்னென்ன என்பதை பார்க்கலாம்.
ஊட்டச்சத்து நிறைந்த அத்திப்பழம்:
அத்திப்பழத்தின் உள்ள ஊட்டச்சத்துக்கள் என்று நாம் பார்த்தால் சர்க்கரை சத்து, புரோட்டீன், கால்சியம், இரும்பு சத்து மற்றும் பாஸ்பரஸ் முதலியவை. மற்ற பழங்களுடன் ஒப்பிட்டு பார்த்தால் அதனை விட நாங்கு மடங்கு அதிக ஊட்டச்சத்துக்கள் இந்த அத்திப்பழத்தில் இருக்கிறது. இதுதவிர, இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி போன்ற வைட்டமின்களும் உள்ளன.
அத்திப்பழத்தின் அற்புத மருத்துவ குணங்கள்:
➦ நாம் அன்றாடும் சாப்பிடும் சாப்பாட்டில் உப்பு அதிகம் சேர்த்து கொள்ளும் போது நம் உடலில் சோடியம் அளவு அதிகரிக்கும். இதனால், சோடியம் மற்றும் பொட்டாசியத்தின் ஏறத்தாழ்வு ஏற்பட்டு உடலில் இரத்த அழுத்தம் ஏற்படும். இந்த இரத்த அழுத்தத்தை குணப்படுத்த அன்றாடும் அத்திபழத்தை சாப்பிடுவது சிறந்த மருந்தாகும். எனவே தினமும் 1 உலர்ந்த அத்திப்பழம் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ளுங்கள். இரத்த அழுத்தத்தில் இருந்து விடுபடலாம்.
➦ மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் தினமும் உணவருந்திய பிறகு சிறிது அத்திப்பழத்தின் விதையை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை விரைவில் குணமடையும். அதேபோல், தினமும் இரவு தூங்குவதற்கு முன் 5 அத்திப்பழம் சாப்பிட்டு வருவதனால் மலச்சிக்கல் என்ற பிரச்சனையே வராது; இருந்தாலும் விரைவில் காணாமல் போய்விடும்.
➦ அத்திப்பழத்தினை தேனில் ஊறவைத்து தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் அளவற்ற ஆரோக்கியத்தை பெறலாம். அதேபோல், தினமும் காலை மாலை என இருவேளையும் 5 முதல் 10 அத்திப்பழத்தினை சாப்பிட்டுவிட்டு ஒரு கிளாஸ் பால் குடித்து வந்தால் உடலில் தாது விருத்தியாகும். ஆண்மலடு நீங்கி ஆண்மை அதிகரிக்கும்.
➦ நமது உடலில் ஹீமோகுளோபினை எடுத்து செல்வதற்கு இரும்பு சத்து அவசியம் தேவை. இந்த ஹீமோகுளோபின் அளவில் பற்றாக்குறை இருக்கும்பட்சத்தில் இரத்த சோகை ஏற்படுகிறது. எனவே, இரத்த சோகை பிரச்சனை இருப்பவர்கள் தினமும் உலர்ந்த அத்திப்பழத்தினை ஒன்று அல்லது இரண்டு சாப்பிட்டு நமது உடலின் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். இதனால் இரத்த சோகை விரைவில் குணமடையும்.
➦ வெண்குஷ்டம் நோயை குணப்படுத்த சீமை அத்திப்பழம் பயன்படுகிறது. அரை கிராம் காட்டு அத்திப்பழத்தை தினசரி ஒருவேளை சாப்பிட்டு வந்தால் வென்புள்ளிகள், வெண் குஷ்டம், தோலின் நிறமாற்றம் முதலிய ஆரோக்கிய பிரச்சனைகள் குணமடையும். அதுமட்டுமின்றி, இந்த அத்திப்பழத்தினை பவுடராக்கி பன்னீரில் கலந்து வெண் புள்ளிகள் மீது பூசி வர வெண்குஷ்டம் மறையும்.
➦ தற்போதை காலக்கட்டத்தில் வாய்ப்புண் என்பது அனைவருக்கும் சந்திக்கும் பொதுவான ஆரோக்கிய பிரச்சனையாகும். அப்படி வாய்ப்புண்ணால் அவதிப்படுபவர்கள் அத்தி காய்களில் இருந்து கிடைக்கும் பாலினை எடுத்து வாய்ப்புண் இருக்கும் இடத்தில் தடவினால் வாய்ப்புண் விரைவில் குணமடையும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…