Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

முகம் கலரா இருக்கணுமா? வெள்ளரிக்காயை இப்படி பயன்படுத்தி பாருங்க...

Nandhinipriya Ganeshan September 22, 2022 & 14:40 [IST]
முகம் கலரா இருக்கணுமா? வெள்ளரிக்காயை இப்படி பயன்படுத்தி பாருங்க...Representative Image.

வெள்ளரிக்காய் நமது உடலுக்கு ஏராளமான நன்மைகளை கொடுக்கிறது. அதுமட்டுமல்லாமல், சரும அழகை பேணி காப்பதிலும் இதை அடித்துக்கொள்ளவே முடியாது. இதற்கு காரணம் இதில் இருக்கும் 96% நீர் சத்து, ஏராளமான வைட்டமின்கள், ஆக்ஸிஜனேற்றங்கள் மற்றும் தாதுக்களே. இவை அனைத்தும் நமது சருமத்திற்கு பிரகாசமான நிறத்தையும், ஈரப்பதத்தையும் தருகிறது. இது ஒரு பொருள் மட்டும் இருந்தால் போது முகப்பரு, கரும்புகள், கருவளையங்கள், வறண்ட சருமம் என பல விதமான சருமப்பிரச்சனைகளில் இருந்தும் விடுபடலாம். இப்படி அனைத்து பிரச்சனைகளையும் ஒரே பொருளால் குணப்படுத்த முடியும், அதுவும் குறைந்த விலையில் என்றால் யார் தான் வேண்டாம் என்று சொல்வார்கள். ஆனால், வெள்ளரிக்காயை நேரடியாக அப்ளை செய்யாமல், அதை சற்று வித்தியாசமான முறையில் பயன்படுத்தப் போகிறோம் அவ்வளவு தான். 

கண்களை சுற்றியிருக்கும் கருவளையம் மறைய எளிமையான டிப்ஸ்..

வெள்ளரிக்காய் சருமத்தில் கொலாஜனை உருவாக்கி சரும துளைகளை இறுகச் செய்து இளமையாக வைத்துக்கொள்ளும். ஆழமாக சுத்தப்படுத்துவதால் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெயைக் குறைத்து, மிருதுவாகவும், பிரகாசமாகவும் மாறுகிறது. வெள்ளரியில் உள்ள காஃபிக் அமிலம் கண்களுக்குக் கீழே நீர் தேங்குவதை தடுக்கிறது. இதில் இருக்கும் வைட்டமின் சி சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை மீட்டெடுத்து, சுருக்கங்களை குறைக்கிறது. 

கரும்புள்ளி மறைய

வெள்ளரிக்காய் சாறு மற்றும் உருளைக்கிழங்கு சாறு ஆகியவற்றை 1:1 என்ற விகிதத்தில் எடுத்து நன்றாக கலக்கி, ஐஸ் கியூப் ட்ரேயில் ஊற்றி ஃப்ரீசரில் 6 மணிநேரம் வையுங்கள்.

பின்னர், அதை வெள்ளரிக்காய் மற்றும் உருளைக்கிழங்கு ஐஸ் க்யூப்பை எடுத்து முகத்தில் 3-4 நிமிடங்களுக்கு வட்ட இயக்கத்தில் மசாஜ் செய்யுங்கள். 

காயவிட்டு பின் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவிடுங்க. கரும்புள்ளிகள் மறையும் வரை இதை தினமும் தவறாமல் பயன்படுத்த வேண்டும்.

எண்ணெய்பசை நீங்க

1 வெள்ளரிக்காய் மற்றும் 2 ஸ்ட்ராபெரி பழம் இரண்டையும் மிக்ஸி போட்டு தண்ணீர் சேர்க்காமல் நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். 

இதை ஐஸ் கியூப் ட்ரேயில் ஊற்றி ஃப்ரீசரில் 5 மணிநேரம் வையுங்கள். பின்னர், முகத்தை தண்ணீரில் கழுவிவிட்டு நன்றாக துடைத்துவிட்டு அந்த ஐஸ்கட்டியை எடுத்து 5 நிமிடங்களுக்கு வட்ட இயக்கத்தில் மசாஜ் செய்யுங்கள். 

பின்பு, காயவிட்டு தண்ணீரில் முகத்தை கழுவிக்கொள்ளுங்கள். இதை தினமும் கூட செய்யலாம். இதனால், சருமத்தில் உள்ள எண்ணெய் பசை நீங்கி பிரகாசமான சருமத்தை பெறலாம். 

வறண்ட சருமத்திற்கு

கற்றாழை, மேலே உள்ள இலையை நீக்கிவிட்டு ஜெல்லை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள். இதோடு ஒரு வெள்ளரிக்காய் எடுத்துக்கொள்ளுங்கள். 

இதை இரண்டையும் மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து ஐஸ் ட்ரேயில் ஊற்றி 6 மணி நேரம் ஃபிரீசரில் வைத்துவிடுங்கள். 

பின்னர் முகத்தை கழுவிவிட்டு, அந்த ஐஸ் கட்டியை எடுத்து முகத்தில் 4 நிமிடம் மசாஜ் செய்யுங்கள். காயவிட்டு கழுவிடுங்க. அவ்வளவு தான். இதை தினமும் கூட செய்யலாம்.

 

மற்ற சரும பிரச்சனைகளுக்கு

புத்துணர்ச்சி பெற வெள்ளரிக்காய் சாறு மற்றும் ரோஸ் வாட்டர் இரண்டையும் 2:1 விகிதத்தில் கலந்து, மேலே கூறியது போல ஐஸ் ட்ரேயில் ஊற்றி மசாஜ் செய்து கழுவிடுங்க. 

சூரிய ஒளியால் ஏற்படும் கருமை நீங்க 1 வெள்ளரிக்காய், 1 கேரட் இரண்டையும் சேர்த்து அரைத்து  மேலே கூறிய வழிமுறையை பின்பற்றுங்கள்.

கருவளையம் இருந்தால் வெள்ளரிக்காய் ஒன்றை அரைத்து மேலே கூறிய வழிமுறையை பின்பற்றுங்கள். இவை அனைத்தையும் கை, கால்களுக்கும் பயன்படுத்தலாம். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்