ஆண்மைக்கு உதவும்:
இந்த ரோஜா குல்கந்தை ஆண்மை பெருக்கி என்றும் சொல்வார்கள். ஏனென்றால், ஆண்களின் உடலுக்கு வலிமையை கொடுக்கக்கூடியது. கணினியில் பணி புரியும் ஆண்களுக்கு உடல் உஷ்ணம் அதிகரித்து விந்தணுக்கள் எண்ணிக்கை வீரியம் குறைவதற்கான வாய்ப்புகள் உண்டு. அதுமட்டுமல்லாமல், இது காலப்போக்கில் மலட்டுத்தன்மையை உண்டாக்கவும் வாய்ப்புண்டு. எனவே, இவற்றை முன்கூட்டியே தடுக்க தினமும் இரவில் பாலில் குல்கந்து கலந்து குடித்து வரலாம். இதனால், விந்தணுக்கள் எண்ணிக்கை குறையாமல் இருக்கும். வீரியமும் அதிகமாக இருக்கும்.
Also Read: ரோஜா குல்கந்து வீட்டிலேயே செய்வது எப்படி?
பெண்களுக்கு குல்கந்தின் நன்மைகள்:
மாதவிடாய் என்பது ஒரு இயற்கையான நிகழ்வாகும். இருப்பினும், ஒரு சில பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் அதிகமான இரத்த போக்கு மற்றும் வயிற்று வலியால் அவதிப்படுவார்கள். அவர்கள், காலை நேரத்தில் ரோஜா குல்கந்தை சாப்பிட்டு வந்தால், மாதவிடாய் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளுக்கும் குட் பை சொல்லலாம். மேலும், இது பெண்களின் இனப்பெருக்க உறுப்புகளின் தசைகளை தளர்த்துவதால் அதிகப்படியான வெள்ளைப்படுதல் குணமாகும். அதுமட்டுமல்லாமல், பெண்களின் கருப்பையை பலப்படுத்தும் சக்தியும் இந்த குல்கந்திற்கு உண்டு.
Also Read: ஆண்மையை அதிகரிக்கும் உணவுப்பொருட்கள்..
Tags:
gulkand benefits for periods, gulkand benefits for body heat, gulkand with milk at night benefits, how to eat gulkand in tamil, how to increase sperm count in tamil, how to consume gulkand
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…