How to Make Paal Payasam Kerala Style: பால் பாயசம் கேள்விபட்டிருப்போம். அதுமட்டுமல்லாமல், அது மிகவும் சுலபமாக தயாரித்துவிடக் கூடிய ஒரு இனிப்பு வகை. ஆனால், கேரளாவில் ஓணம் பண்டிகையின் போது ஓணம் சத்யா விருந்தில் இடம்பெறும் பால் பாயசம் சற்று வித்தியாசமானது. அதாவது, அரிசியை பயன்படுத்தி பால் பாயசம் செய்யப்படும். அந்தவகையில், மிகவும் சுலபமாக அரிசி பால் பாயசம் எப்படி செய்வது இப்பதிவில் காணலாம்.
என்ன தேவை?
பாஸ்மதி அரிசி
சர்க்கரை
பால்
குங்குமப்பூ
ஏலக்காய்
நெய்
உலர்ந்த திராட்சை
எப்படி செய்வது?
பாஸ்மதி அரிசியை அரை மணி நேரம் ஊற வைத்து, அதை ஒருமுறை தண்ணீர் கழுவிடுங்கள். அதன்பின், தண்ணீர் ஊற்றாமல் பாலிலேயே அந்த அரிசியை நன்றாக வேக வைக்க வேண்டும்.
பின்னர், மிதமான தீயில் வைத்து அடிப்பிடிக்காதவாஏஉ கிளறி கொண்டே இருக்க வேண்டும். அதன்பின் சர்க்கரை, ஏலக்காய், குங்குமப்பூ ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும்.
மற்றொரு வாணலியில் நெய் விட்டு முந்திரி பருப்பு மற்றும் திராட்சையை பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
இப்போது, வறுத்து வைத்த முந்திரி பருப்பு, திராட்சையை கொதித்து கொண்டிருக்கும் அரிசி பாயசத்தில் சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான அரிசி பால் பாயசம் ரெடி.
இந்த குறிப்பு உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் வீட்டில் முயற்சிப் பாருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…