பெண்ணுக்கும் சரி ஆணுக்கும் சரி முகத்தில் வரக்கூடிய ஒரு அழகு சம்பந்தமான பிரச்சனைகளில் ஒன்றுதான் இந்த பிளாக்கெட்ஸ். இதை குளிக்கும் போது தேய்த்து குளித்தாலும் வலியை ஏற்படுத்தும். இந்த பிளாக்கெட்ஸை போக்க பல டிரீட்மென்ட்ஸ் இருக்கின்றன. ஆனால் அவை எல்லாம் வலி மிகுந்ததாக இருப்பதோடு, அதிக பணமும் செலவிட வேண்டியிருக்கும். இருப்பினும், இந்த கரும்புள்ளிகளை வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே மிகவும் சுலபமான முறையில் அகற்றிவிட முடியும். இதற்காக அதிகம் பணம் செலவு செய்ய வேண்டியதும் கிடையாது. அந்தவகையில், கீழ்க்காணும் ஸ்க்ரப்பை பயன்படுத்துவதன் மூலம் எளிதில் கரும்புள்ளிகளையும், அதன் வேர்களையும் அகற்றிவிடலாம்.
டிப்ஸ் - 1
ஒரு பவுலில் 2 டீஸ்பூன் டீ தூள், 2 டீஸ்பூன் தயிர், சிறிளவு பல் துலக்கும் பேஸ்ட் மூன்றையும் கலந்துக்கொள்ளவும். பின்னர், இந்த கலவையை குளிப்பதற்கு முன்பு மூக்கின் மீது தடவி, காய்ந்த பின் முகத்தை கழுவிக்கொள்ளுங்கள். இப்படி தினமும் செய்துவந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் விரைவில் மறைந்துவிடும்.
டிப்ஸ் - 2
ஒரு பவுலில் 3 டீஸ்பூன் கசகசா, 1 டீஸ்பூன் பல்துலக்கும் பேஸ்ட், 2 டீஸ்பூன் அரிசி மாவு, 1 டீஸ்பூன் சமையல் சோடா ஆகியவற்றை சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல கலக்கிக் கொள்ளுங்கள். பின்னர், முகத்தை நன்றாக கழுவிவிட்டு, மூக்கின் மீது இந்த பேஸ்ட்டை தடவி காய விடவும். காய்ந்த பின் அதை குளிர்ந்த தண்ணீரில் கழுவினால் கரும்புகள் நீங்கிவிடும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…