திருமணமான ஒவ்வொரு பெண்ணுக்கும் முக்கியமான தருணம் கரு உறுதியாகும் தருணம். கருவுற்ற ஆரம்ப நாட்களில் தாங்கள் கருவுற்றிருக்கிறோமா என்பதை வீட்டிலேயே அறிந்து கொள்ளும் வகையில் பல பெண்களும் பயன்படுத்தும் உபகரணம் தான் கர்ப்ப பரிசோதனை கிட். ஆனால், இதுவரை பெண்களின் சிறுநீரை கொண்டு பரிசோதனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது உலகிலேயே முதன்முறையாக உமிழ்நீரை கொண்டு அறியக்கூடிய புதிய தயாரிப்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
'சாலிஸ்டிக்' (Salistick) என்று அறியப்படும் இந்தச் சோதனைக் கருவியானது, கொரோனா சோதனை கருவிகளை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. எங்கும், எந்த நேரத்திலும் சோதிக்கும் திறனை வழங்கும் இந்த தனித்துவமான தயாரிப்பை ஜெருசலேமைச் சேர்ந்த 'சாலிக்னோஸ்டிக்ஸ்' என்ற ஸ்டார்ட்-அப் உருவாக்கியுள்ளது.
இந்த கிட்டில் இருக்கும் குச்சியின் நுனியை, தெர்மாமீட்டரை வாயில் வைப்பது போன்று வைத்துக் கொள்ள வேண்டும். இது உமிழ்நீரை சேகரிக்கும். அந்த உமிழ்நீரை பிளாஸ்டிக் டியூபில் மாற்ற வேண்டும். அப்போது, வேதியியல் நிகழ்வுகள் நடைபெற்று, கர்ப்பத்திற்குரிய ஹார்மோன் (எச்.சி.ஜி) இருக்கிறதா என்பதை கண்டறியும்.
இவ்வாறு பரிசோதனை செய்வதன் மூலம் 5 முதல் 15 நிமிடங்களுக்குள் கர்ப்ப பரிசோதனை குறித்த முடிவுகளை தெரிந்துக் கொள்ளலாம். ஆரம்ப அறிகுறிகள், முதல் மூன்று நிமிடங்களுக்கு முன்பே தோன்றிவிடும். தற்போது இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தில் இந்தத் தயாரிப்பு விற்பனைக்கு வந்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…