மஞ்சள் காமாலை என்றால் என்ன?
நமது உடலில் பிலிரூபின் என்ற பித்த நீரானது அதிகமாகும் இந்த மஞ்சள் காமாலை நோய் ஏற்படுகிறது. அதாவது, மண்ணீரலில் இருக்கும் இரத்த சிவப்பணுக்கள் அழிக்கப்படும்போது இந்த பிலிரூபின் என்ற பித்த நீரானது சுரக்கப்படும். பொதுவாகவே, இது மலம், சிறுநீர் வழியாக வெளியேறிவிடும். கல்லீரல் பாதிக்கப்பட்டாலோ, பித்த குழாயில் அடைப்பு ஏற்பட்டாலோ இந்த பிலிரூபின் உடலிலேயே தங்கிவிடும். இதனால், சருமமும் கண்களும் மஞ்சள் நிறமாக மாறாக தொடங்கும். இதைத் தான் 'மஞ்சள் காமாலை' என்கின்றோம்.
குழந்தைகள் முதல் பெரியவர்களை அனைவரையும் பாதிக்கும் இந்த மஞ்சள் காமாலையை தடுக்கக்கூடிய தடுப்பூசிகள் எதுவும் இதுவரை இல்லை. இந்த மஞ்சள் காமாலையை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சைகளை மேற்கொண்டால் குணப்படுத்துவது எளிது. இல்லையெனில் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்த கூடியது. மஞ்சள் காமாலை உங்களுக்கு இருப்பதை சில அறிகுறிகளை வைத்து எளிதாக கண்டுபிடித்த முடியும். அவை என்னென்ன என்பதை பார்க்கலாம்.
தோலின் நிறம் மாறுவது:
மஞ்சள் காமாலை இருப்பதை உறுதிப்படுத்தும் முதல் அறிகுறியே இது தான். மஞ்சள் காமாலையின் மிகவும் பொதுவான அறிகுறிகளில் இதுவும் ஒன்று. அதாவது, நீங்கள் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டிருந்தால் உங்களுடைய தோல் மற்றும் கண் மஞ்சள் நிறமாக தோற்றமளிக்கும். இரத்தத்தில் பிலிரூபின் அளவு அதிகமாக இருப்பதால் இந்த மஞ்சள் நிறம் ஏற்படுகிறது.
வாந்தி உணர்வு:
மஞ்சள் காமாலை மற்றொரு பொதுவான அறிகுறி அடிக்கடி வாந்தி ஏற்படுவது. பொதுவாக, வயிறு சம்பந்தப்பட்ட மற்ற பிரச்சனைகளால் கூட வாந்தி ஏற்படும். ஆனால், தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு மேல் வாந்தி பிரச்சனை இருந்தால் சற்றும் தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுகி மஞ்சள் காமாலை இருக்கிறதா என்பதை பரிசோதித்துக் கொள்வது நல்லது.
திடீர் எடை குறைவு:
இயல்பைவிட அசாதாரணமான அளவில் ஏற்படும் எடை இழப்பும் மஞ்சள் காமாலையின் அறிகுறியே. மஞ்சள் காமாலை ஏற்பட்டால் நாம் சாப்பிடும் உணவுகளில் இருந்து போதுமான ஊட்டச்சத்துக்களை குடலால் உறிஞ்ச முடியாது. இதனால் பசியின்மை மற்றும் வாந்தி ஏற்படும். இதன் காரணமாக சாப்பிடும் உணவின் அளவும் குறைந்து விடும். இதுவே திடீர் மற்றும் மோசமான உடல் எடை குறைவுக்கு காரணம்.
அதிகப்படியான காய்ச்சல்:
பொதுவாக, காய்ச்சல் அனைவருக்குமே ஏற்படும். இருப்பினும், மஞ்சள் காமாலை இருப்பதை வெளிப்படுத்தும் அறிகுறியாகவும் காய்ச்சல் இருக்கிறது. அதாவது, அந்த காய்ச்சலானது உடம்பின் வெப்பநிலை 100 ஐ காட்டிலும் அதிகமாக இருப்பதோடு, அடிவயிற்றில் வலி, வீக்கம் மற்றும் கால்களில் வீக்கம் போன்றவை இருந்தால் அது மஞ்சள் காமாலை தான்.
சிறுநீர், மலம் நிறம் கருப்பு:
ஒருவேளை உங்களுக்கு மஞ்சள் காமாலை இருந்தால், உங்கள் சிறுநீர் கருமை நிறமாக மாறும் வாய்ப்புகள் உள்ளன. இதற்கு காரணம் சிறுநீர்க்குழாய் வழியாக அதிகப்படியான பிலிரூபின் வெளியேற்றப்படுவதே. அதேபோல், சிலருக்கு மலத்தின் நிறத்தில் மாற்றம் ஏற்படும். இதற்கு காரணம் உடலில் மஞ்சள் காமாலையின் தீவிர தன்மையே. உடலில் மஞ்சள் காமாலை தீவிரமானால் கல்லீரல் வேலை செய்வதை நிறுத்திவிடும். இதனால் மலமானது கருமை நிறத்தில் வெளியேறும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…