பாராசிட்டமால் என்ற மாத்திரை தற்போது அனைவருக்கும் பரிச்சயமான மாத்திரையாக இருந்து வருகிறது. காரணமாக சளி, காய்ச்சல், தலைவலி, உடல்வலி போன்ற பொதுவான உடல்நல பிரச்சனைகளுக்கும் இந்த பாராசிட்டமால் மாத்திரை தான் பரிந்துரைக்கப்படுகிறது. இது மிகவும் பாதுகாப்பானது என்று நினைத்து தலைவலி, காய்ச்சல், உடல்வலி, சளி என எதுவந்தாலும் மருத்துவரை அணுகாமல் பாராசிட்டமால் மாத்திரையை எடுத்துக் கொள்ளும் பழக்கம் பலரிடம் காணப்படுகிறது. இதற்காகவே வீட்டில் ஒரு ஸ்டாக் எப்போதும் வைத்துக் கொண்டிருப்பார்கள்.
தலைவலி, டென்ஷன், ஒற்றைத் தலைவலி, முதுகு வலி, தசை வலி, மூட்டு வலி, பல்வலி, மாதவிடாய் வலி, சளி மற்றும் காய்ச்சல், தொண்டை வலி, சைனஸ் வலி மற்றும் அறுவை சிகிச்சைக்குப் பின் வலி போன்ற அனைத்து பொதுவான உடல் உபாதைகளுக்கும் சர்வரோக நிவாரணியாக விளங்கும் இந்த பாராசிட்டமால் மாத்திரையை அடிக்கடி எடுத்துக் கொண்டால் உடலில் பல மோசமான பக்கவிளைவுகளை ஏற்படும். அவை என்னென்ன என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
பாராசிட்டமால் மாத்திரை பக்க விளைவுகள்:
மருத்துவர் ஆலோசனையின் படி அளவோடு எடுத்துக் கொண்டால் எந்த பாதிப்பும் இருக்காது. ஆனால், அதனைவிட மிக அதிக அளவில் தினமும் எடுத்துக் கொள்ளும் போது உடலில் மருந்தின் அளவு கூடிப்போய் கீழ்க்காணும் பக்கவிளைவுகளை சந்திக்க நேரிடும்.
➥ பாராசிட்டமால் மாத்திரையை தினமும் எடுத்துக் கொள்வதால் வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, வாய் வறட்சி போன்ற பிற அறிகுறிகளுடன் குமட்டல் மற்றும் வாந்தியையும் ஏற்படுத்தும்.
➥ அதேபோல், அடிக்கடி இந்த மருந்தை எடுத்துக் கொள்வதால், சொறி, படை நோய், அரிப்பு மற்றும் சிவப்பு புள்ளிகள் போன்ற தோல் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படும்.
➥ சில சமயங்களில் மாரடைப்பு, இரத்த அழுத்தம் மற்றும் பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
➥ சாதாரண உடல் உபாதைகளுக்கு அடிக்கடி இந்த மாத்திரையை எடுத்துக் கொண்டால் விரைவில் கல்லீரல் செயலிழப்பு ஏற்பட்டு, மரணத்தை உண்டாக்கும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…