Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Indian Wedding Traditions: திருமணம் முடிந்த பின்பு மணமக்களுக்கு பாலும், பழமும் கொடுப்பதற்கு இதுதான் காரணமா?

Nandhinipriya Ganeshan June 09, 2022 & 16:15 [IST]
Indian Wedding Traditions: திருமணம் முடிந்த பின்பு மணமக்களுக்கு பாலும், பழமும் கொடுப்பதற்கு இதுதான் காரணமா?Representative Image.

Indian Wedding Traditions: திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்று பெரியவர்கள் சொல்லிருப்பதை கேள்விப்பட்டிருப்போம். அந்த வகையில், திருமணத்தில் செய்யப்படும் சடங்குகளுக்கு பின்னாலும் ஒவ்வொரு காரணங்கள் மறைந்திருக்கும். அதன்படி, திருமணமான புதுமணத் தம்பதிகளுக்கு வீட்டிற்கு வந்ததும் முதல் உணவாக கொடுக்கப்படுவது பாலும் பழமும் தான். நாமும் நம் வீட்டில் யாருக்காவது திருமணம் நடந்திருந்தால் பார்த்திருப்போம். ஏன் மணமக்களுக்கு பாலும், பழமும் கொடுக்கிறார்கள் என்று தெரியுமா?

நம் முன்னோர்கள் செய்யும் எந்தவொரு செயலுக்கு பின்னாலும் பல காரணங்களும், தத்துவங்களும் மறைந்திருக்கும். அந்த வகையில் திருமணம் முடிந்த பின் ஏன் மணமக்களுக்கு பாலும், பழமும் கொடுக்கிறார்கள் என்பதை பற்றி தெரிந்துக் கொள்வோம். 

தாலி கட்டு வரவேற்பு நிகழ்ச்சி முடிந்த பின்பு மணமக்களை மணமகன் வீட்டிற்கு அழைத்துச் செய்வார். அப்போது வீட்டிற்கு வந்த மணமகள் பூஜை அறைக்கு சென்று முதலில் விளக்கேற்ற சொல்வார்கள், அது முடிந்து பாலும் பழமும் சாப்பிட தருவார்கள்.  முதலில் ஒரு டம்பளரில் பாலைக் கொடுத்து இருவரையுமே குடிக்க சொல்வார்கள். அதன் பின் ஒரே பழத்தை இருவரையும் சாப்பிடச் சொல்வார்கள். இதற்கு காரணம் இருவரும் இனி வேறு வேறு இல்லை இரண்டில் ஒருவர் என்பதனை உணர்த்தவே.

பெண்ணிற்கு கொடுப்பதற்கான காரணம்:

திருமணம் முடிந்த பின்பு புகுந்த வீட்டிற்கு வரும் மணப்பெண் தான் பிறந்து வளர்ந்த வீட்டை விட்டு புதிய சூழலில்  புதிய குடும்பத்தோடு வாழ வருவதால் அந்த குடும்பத்தில் உள்ள நபர்களோடு அந்த பெண்ணிற்கு அவ்வளவாக புரிதல் என்பது இருக்காது. பசு மாடு விஷத்தையே உண்டாலும், அது சுரக்கும்  அதை மறைமுகமாக சொல்லி புகுந்த வீட்டில் ஏற்படக்கூடிய கஷ்ட, கேலி, கிண்டல்கள், நஷ்டங்களையும் பொறுத்துக் கொண்டு விஷம் போன்ற வார்த்தைகளை அள்ளி வீசாமல் இருக்க பசும் பால் கொடுக்கப்படுகிறது.

மணமகனுக்கு கொடுப்பதற்கான காரணம்:

பாலில் தயிரும் நெய்யும் எப்படி உள்ளதோ அதுபோல் இந்த பெண்ணிடம் நிறையும் குறைகளும் உள்ளது அதை பக்குவம் இல்லாமல் அவசரப்பட்டு கெடுத்து வைக்காமல் மிகுந்த பொறுமையோடு கடைந்து நல்ல வெண்ணையாக எடுப்பாயாக என்று பாலையும், வாழை மரத்தை எப்படி அதன் தாய் மரத்திலிருந்து பக்குவமாகப் பிரித்து நடுகின்றோமோ அதேப்போல் இந்தப் பெண்ணை வேறொரு குடும்பத்திலிருந்து உங்கள் குடும்பம் என்னும் தோட்டத்தில் நட்டு உள்ளோம் அது பற்றுப் போகவிடாமல் பக்குவமாக கவனித்து அதிலிருந்து உங்கள் சந்ததிகளை வாழையடி வாழையாக விருத்திசெய்து கொள்ளுங்கள் என உணர்த்தவே பழமும் கொடுக்கிறார்கள்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்த ளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்