கோலம் என்றாலே தனிக் கலைத்தான். அதிலும் விதவிதமான பூக்களாலே போடப்படும் அத்தப்பூ கோலம் ரொம்பவே ஸ்பெஷல். அந்தவகையில், கேரள மக்களின் மிகவும் சிறப்பு வாய்ந்த பண்டிகையான ஓணம் பண்டிகையில் போடப்படும் அத்தப்பூ கோலங்களுக்கு தனி சிறப்புண்டு.
கேரளத்து மன்னரான மகாபலி அரசரை வரவேற்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது இந்த திருவோணம் பண்டிகை. இவ்வாண்டு ஆகஸ்ட் 20 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை கொண்டாடப்படவுள்ளது. தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும் இந்த பண்டிகையில், பெண்கள் பாரம்பரிய உடைய கசவு புடவையையும், ஆண்கள் வேஷ்ட்டி சட்டையையும் அணிந்துக் கொண்டு ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அத்தப்பூக்களால் கோலம் போட்டு, சத்யா விருந்து படைத்து வழிபாடு செய்து வெகு சிறப்பாக கொண்டாடுவார்கள்.
திருவிழாவின் கடைசி நாளான திருவோணத்தன்று மட்டும் கோலத்தின் அளவு பெரியதாக இருக்கும். இந்த அத்தப்பூ கோலமிடுவதற்கு காசி, அரிப்பூ, சங்குப்பூ போன்ற பூக்களை தான் அதிகம் பயன்படுத்துவார்கள். அந்த வகையில், இவ்வாண்டு புதுப்புது டிசைன்ஸ்களை கொண்ட அத்தப்பூ கோலங்களால் உங்க வீட்டை அழகரியுங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…