இந்திய வாள்வீச்சு வீராங்கனையான தமிழகத்தைச் சேர்ந்த சி.ஏ.பவானி தேவி காமன்வெல்த் வாள்வீச்சு சாம்பியன்ஷிப் 2022 இல் தனிநபர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார்.
இங்கிலாந்தின் பர்மிங்காமில் சமீபத்தில் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் 2022 நடைபெற்று முடிந்த நிலையில், தற்போது லண்டனில் காமன்வெல்த் வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இதில் இந்தியாவின் பவானி தேவி காமன்வெல்த் சீனியர் மகளிர் சேபர் தனிநபர் பிரிவில் தங்கம் வென்றார். அவர் ஆஸ்திரேலியாவின் வெரோனிகா வாசிலேவாவை 15-10 என்ற கணக்கில் தோற்கடித்து வெற்றி பெற்றார்.
முன்னதாக 2020 ஆம் ஆண்டு ஹங்கேரியில் நடைபெற்ற வாள்வீச்சு உலகக் கோப்பையின் காலிறுதியை எட்டிய பிறகு, டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்ற ஒரே இந்திய வாள்வீச்சு வீராங்கனை என்ற பெருமையை பவானி தேவி படைத்திருந்தார்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லாவிட்டாலும், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திருந்த அவர், தற்போது காமன்வெல்த் சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…