3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்தை இந்தியா 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது.
ஷுப்மான் கில் இந்த ஆட்டத்தில் இரட்டை சதம் அடித்து, இந்தியாவை 349 ரன்கள் குவிக்க வழிவகுத்ததில் குறிப்பிடத்தக்க பங்கு வகித்தார். மறுபுறம், நியூசிலாந்து 29வது ஓவரில் 131 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 6வது விக்கெட்டை இழந்தது. இந்த நிலையில் போட்டி இந்தியாவின் பிடியில் இருந்தது.
ஆனால் அடுத்து 7வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மைக்கேல் பிரேஸ்வெல் மற்றும் மிட்செல் சான்ட்னர் வெற்றியை தங்கள் பக்கம் திருப்ப ஆரம்பித்தனர். இதனால் கில் இரட்டைச் சதம் அடித்தாலும், இந்திய அணிக்கு தோல்வியே கிடைக்கும் என அனைவரும் நினைக்க ஆரம்பித்தனர்.
131 ரன்களில் தொடங்கிய இந்த பார்ட்னர்ஷிப் முறிந்தபோது இந்த இரண்டு பேட்ஸ்மேன்களும் சேர்ந்து நியூசிலாந்தின் மொத்த ஸ்கோரை 45.4 ஓவர்களில் 293 ரன்களுக்கு கொண்டு சென்றனர். நியூசிலாந்து இன்னிங்ஸின் 46வது ஓவரில் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ், இந்த ஜோடியை பிரித்து, ஆட்டத்தை இந்தியா பக்கம் மீண்டும் கொண்டு வந்தார்.
மிட்செல் சான்ட்னர் அவுட்டானாலும், நியூசிலாந்தின் பிரேஸ்வெல் எந்த வாய்ப்பையும் விட்டுவிடவில்லை. ஆவான் அவரும் 140 ரன்களில் அவுட்டாக, நியூசிலாந்து இறுதியில் 49.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 337 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதன் மூலம் 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வலுவான ரன்களை குவித்தாலும், எதிராணியும் கடும் போட்டியை கொடுத்ததால், கடைசி வரை போராடி இந்திய த்ரில் வெற்றியே பெற முடிந்தது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை வகிக்கிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…