Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

2021 ஐபிஎல் தொடரில் எனக்கும் தோனிக்கும் சண்டையா? சுரேஷ் ரெய்னா ஓபன் டாக்!

Iravaadhan Updated:
2021 ஐபிஎல் தொடரில் எனக்கும் தோனிக்கும் சண்டையா? சுரேஷ் ரெய்னா ஓபன் டாக்!Representative Image.

மும்பை : 2021ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் போது சிஎஸ்கே அணியில் தனக்கு பதிலாக உத்தப்பாவுக்கு வாய்ப்பு வழங்குவதற்காக தோனி தன்னிடம் அனுமதி பெற்றதாக சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மிக முக்கியமான வீரர் என்றால் அது சுரேஷ் ரெய்னா தான். தோனி கூட சில போட்டிகளில் விளையாட தடுமாறினாலும் ரெய்னா நம்பர் 3வது வீரராக களம் இறங்கி பல்வேறு போட்டிகளில் அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்திருக்கிறார். ஐபிஎல் இறுதிப்போட்டிகள் மற்றும் விளையாட்டுக்கு சிஎஸ்கே அணிக்காக அதிக ரன்கள் அடித்த வீரர் என்றால் அது ரெய்னா தான். அப்படிப்பட்ட ரெய்னாவை சிஎஸ்கே அணி நிர்வாகம் 2021 ஆம் ஆண்டு பாதியில் நீக்கியது.

2021 ஐபிஎல் தொடரில் எனக்கும் தோனிக்கும் சண்டையா? சுரேஷ் ரெய்னா ஓபன் டாக்!Representative Image

மேலும் அடுத்த சீசனில் ரெய்னாவை அணியில் எடுக்கவில்லை. இதனால் ரெய்னாவுக்கும் தோனிக்கும் ஏதேனும் பிரச்சனை இருக்கிறதா என ரசிகர்கள் பேசி வருகின்றனர். இந்த நிலையில் ரெய்னா அளித்த பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது. அதில் சிஎஸ்கே அணியை விட்டு ரெய்னா நீக்கப்பட்டபோது என்ன நடந்தது என்பது குறித்து அவர் பேசியிருக்கிறார். 2021 ஆம் ஆண்டு சின்னதல ரெய்னா 12 போட்டிகளில் விளையாடி 230 ரன்கள் அடித்திருந்தார்.

அப்போது ரெய்னாவை சிஎஸ்கே அணி நிர்வாகம் அதிரடியாக நீக்கி ராபின் உத்தப்பாவுக்கு வாய்ப்பு வழங்கியது. அப்போது தோனி தம்மிடம் வந்து உனது இடத்தில் உத்தப்பாவை விளையாட வைக்கலாமா என்று என்னிடம் அனுமதி கேட்டார் என்று ரெய்னா கூறியுள்ளார். உடனே நான் உத்தப்பா கிரிக்கெட்டில் மீண்டும் சாதிப்பதற்காக கடுமையாக பயிற்சிகளை எடுத்து வந்திருக்கிறார். அவருக்கு போதிய வாய்ப்பு கிடைக்கவில்லை.

நீங்கள் தாராளமாக விளையாட வையுங்கள் என்று நான் கூறினேன். அணியை விட்டு நீக்கும் போது தோனி தம்மிடம் வந்து அனுமதி வாங்கியது என்னை பிரமிப்பில் ஆழ்த்தியது என்று ரெய்னா கூறியுள்ளார். ரெய்னாவுக்கும் தோனிக்கும் உறவில் விரிசல் ஏற்பட்டதாக பலரும் கூறிவரும் நிலையில் ரெய்னாவின் இந்த பேட்டி வைரலாகி வருகிறது. மேலும் ஐபிஎல் கோப்பையை சிஎஸ்கே ஐந்தாவது முறையாக வென்ற போது ரெய்னா தோனியை கட்டிப்பிடித்து தனது மகிழ்ச்சி வெளிப்படுத்திய வீடியோவும் தற்போது சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்