ஐபிஎல் 2023 தொடரின் இறுதி போட்டி நரேந்திர மோடி மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பௌலிங்கை தேர்வு செய்தது.
குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்
முதலில் களமிறங்கிய குஜராத் அணி வீரர்கள் விருத்திமான் சாஹா மற்றும் சுப்மன் கில் போட்டியின் தொடக்கத்தில் இருந்தே வெறித்தனமாக ஆட்டத்தை முன்னெடுத்து சென்றனர். 6வது ஓவர் முடிவில் சுப்மன் கில் (39) முதலில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து விருத்திமான் சாஹா (54), சாய் சுதர்சன் (96) மற்றும் ரஷித் கான் (0) ரன்களில் அவுட் ஆகினர். போட்டி முடிவில் ஹர்திக் பாண்டியா (21) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 20 ஓவர் முடிவில் குஜராத் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் எடுத்து.
சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங்
சென்னை அணி விளையாட ஆரம்பித்த 3வது பந்தில் மழை பெய்ய ஆரம்பித்தது. அந்த நேரத்தில் சென்னை அணி 4 ரன்கள் எடுத்திருந்தது. மழை நிற்காமல் இருந்ததால் போட்டி சிறிது நேரம் ஒத்தி வைக்கப்பட்டது. கிரிக்கெட் போட்டியில் இந்த மரியானா தருணங்களில் டக்வொர்த்/லூயிஸ் ஸ்டெர்ன் முறை கணக்கிடப்படும். அந்த வகையில் சென்னை அணி 15 ஓவரில் 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று அறிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து விளையாட ஆரம்பித்த சென்னை அணி வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட் (26), டெவோன் கான்வே (47), அஜிங்க்யா ரஹானே (27), அம்பதி ராயுடு (19) மற்றும் எம்எஸ் தோனி (0) ஆகியோர் ஆட்டமிழந்தனர். இறுதியில் சிவம் துபே (32) மற்றும் ரவீந்திர ஜடேஜா (15) இருவரும் அவுட் ஆகாமல் இருந்தனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களுக்கு கொடுத்த 15 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் எடுத்து இலக்கை அடைந்தனர். ஐபிஎல் 2023 தொடரின் சாம்பியன்ஷிப்பை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கைப்பற்றியது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…