குஜராத் டைட்டன்ஸ் (ஜிடி) கேப்டன் ஹர்திக் பாண்டியா சிஎஸ்கே அணி பற்றி பிரமித்து கூறிய விஷயம் என்ன தெரியுமா?
சமீபத்தில் ஐபிஎல் 2023 ஐ ஒட்டி முன்னாள் சிஎஸ்கே கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா 'ஜியோசினிமா' நிகழ்வைத் தொகுத்து வழங்கியுள்ளார். அந்த நிகழ்வின் உரையாடலின் போது, ஹர்திக் பாண்டியா தனது முக்கிய கற்றல்களைப் பற்றி பேசினார். அவர் கூறியதாவது, "நான் MI அணிக்காக விளையாடிக்கொண்டிருக்கும் போது சிறந்த வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களைத் தேர்ந்தெடுத்து அவர்கள் உச்சத்தில் செயல்படக்கூடிய சூழலை உருவாக்குவதன் மூலம் நாங்கள் பல சாம்பியன்ஷிப்களை பெற்றுள்ளோம். அதன் மூலம் ஒரு அணியை வெற்றியை நோக்கி வழிநடத்தி செல்ல சிறப்பாக செயல்படுபவர்களை தேர்ந்தெடுக்கும் யுத்தியை கற்றுக்கொண்டேன்.
ஆனால் அதற்கு மற்றொரு வழி இருக்கிறது என்பதை நான் CSK அணியிடம் இருந்து கற்றுக்கொண்டேன். அதாவது அணியில் கை தேர்ந்த வீரர்கள் இல்லாவிட்டாலும் அவர்களிடம் இருக்கும் சிறப்புகளை கண்டறிந்து சிறந்த சூழலை அமைப்பதன் மூலம் வெற்றி பெற முடியும் என்னும் விஷயம் மிகவும் என்னை பிரம்மிக்க வைத்தது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…