கொல்கத்தா அணியில் இருந்து திடீரென வெளியேறிய வீரருக்கு பதிலாக ஜேசன் ராய் சேர்க்கப்பட்டுள்ளார் என்னும் அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐபிஎல் 2023 தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு சுமார் 1.5 கோடி ஏலத்தில் பங்களாதேஷ் வீரர் ஷகிப் அல் ஹசன் ஏலத்தில் எடுக்கப்பட்டார். ஆனால் அவர் தற்போது தனிப்பட்ட காரணங்களுக்காக போட்டி தொடரில் இருந்து வெளியேறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அவருக்கு பதிலாக இங்கிலாந்து அணி வீரர் ஜேசன் ராயை 2.8 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளதாக நிர்வாகம் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மேலும் கொல்கத்தா அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். இப்போது அவருக்கு பதிலாக நிதிஷ் ராணா கொல்கத்தா அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…