கடந்த 2020 ஆகஸ்ட் 15 ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த சிஎஸ்கே அணி கேப்டன் தோனி தற்போது ஐபிஎல் தொடர்களில் மட்டுமே விளையாடி வருகிறார். அந்தவகையில், தற்போது ஐபிஎல் தொடரின் 16வது சீசன் இந்தியா முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இந்த சீசனோடு தோனி தனது கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெறுவதாக சொல்லப்படுகிறது. இதனால், சிஎஸ்கே அணி இந்தியாவில் எந்த ஸ்டேடியத்தில் விளையாடினாலும் மகேந்திர சிங் தோனியை நேரில் காண்பதற்காக ரசிகர்களின் கூட்டம் அலைமோதுகிறது.
இந்த நிலையில், ஐபிஎல் தொடரின் 49வது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. அந்த போட்டியில் சென்னை - மும்பை அணிகள் மோதின. அப்போது, மைதானத்தில் அமர்ந்திருந்த ரசிகர்களில் ஒருவர் தோனி போன்றே இருக்கும் வீடியோ ஒன்று வெளியாகி ரசிகர்களை மிரள வைத்துள்ளது.
ஏனென்றால், அந்த நபர் தோனி வயதான தோற்றத்தில் எப்படி இருப்பாரோ அப்படியே அச்சசலாக இருக்கிறார். இன்னும் 15 ஆண்டுகள் கழித்து தோனி எப்படி இருப்பாரோ அப்படியே இருப்பதால் தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…