ஐபிஎல் 2023 இறுதி கட்டத்தை நெருங்கும் நஒக்கத்தில் அனைத்து அணிகளும் தங்களது முழு முயற்சிகளுடன் செயல்பட்டு விளையாடிக் கொண்டிருக்கிறது. இதில், சிஎஸ்கே-க்கு எதிரான வெற்றி உடன், பிளேஆஃப் பந்தயத்தில் டெல்லி கேபிடள்ஸ் அணி இருப்பதாக நம்பப்படுகிறது.
கடந்த செவ்வாய் அன்று, இந்தியன் பிரீமியர் லீக் போட்டியான ஐபிஎல் 2023-ல் மும்பை அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு இடையே போட்டி நடைபெற்றது. சாதனை நேர வெற்றியாளர்களான மும்பை இந்தியன்ஸ் விராட் கோலி இருந்த அணியானது 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி போட்டியின் இறுதி சுற்றுக்குத் தகுதி பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கச் செய்தது.
மேலும், சூர்யகுமார் யாதவ் 35 பந்துகளில் 83 ரன்கள் விளாசி, மும்பை இந்தியன்ஸ் சொந்த மைதானத்தில் ஆர்சிபிக்கு எதிராக வெற்றியைப் பெற்றது. இந்த வெற்றியின் மூலம், ஐபிஎல் 2023 புள்ளிகள் பட்டியலில் மும்பை அணி மூன்றாவது இஅத்திற்கு முன்னேறியது. 11 ஆட்டங்களில் 12 புள்ளிகளுடன், மும்பை அணி ஐபிஎல் 2023 புள்ளிப்பட்டியலில் CSK அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணி போன்றோருக்குப் பின்னாலே உள்ளது.
இந்த ஐபிஎல் 2023 சீசனின், கடைசி 3 ஆட்டங்களில் மும்பை வெற்றி பெற்றால், ஐபிஎல் 2023 புள்ளிகள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பெறுவார்கள். இதனைத் தொடர்ந்து மும்பை அணி விளையாடக்கூடிய ஆட்டங்களைப் பொறுத்தே மும்பை அணியின் வெற்றி அமையும்.
சிஎஸ்கே அணியின் வெற்றியை ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். இதில், தோனியின் CSK அணியின் மீதமுள்ள 3 ஆட்டங்களில் 2 ஆட்டங்கள் சேப்பாக்கத்தில் நடைபெற உள்ளது. இதுவரை நடந்த ஐபிஎல் 2023 போட்டிகளில் தோனி அன்ட் கோ 11 ஆட்டங்களில் 13 புள்ளிகள் எடுத்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…