Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மேரிகோம் தலைமையில் விசாரணை குழு.. விளையாட்டுத்துறை அமைச்சர் அறிவிப்பு!!

Sekar Updated:
மேரிகோம் தலைமையில் விசாரணை குழு.. விளையாட்டுத்துறை அமைச்சர் அறிவிப்பு!!Representative Image.

முன்னாள் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் இந்திய மல்யுத்த சம்மேளன தலைவருக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஐந்து பேர் கொண்ட மேற்பார்வைக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக பேசிய இந்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், இன்று மேற்பார்வைக் குழு அமைக்கப்பட்டு, குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் குழுவின் தலைவராக அறிவிக்கப்பட்டதாக தெரிவித்தார். 

வரும் ஒரு மாதத்திற்கு, மல்யுத்த வீரர்கள் முன்வைத்த குற்றச்சாட்டுகளை, குழு விசாரிக்கும் என விளையாட்டுத்துறை அமைச்சர் மேலும் கூறினார்.

முன்னதாக, இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் ஷரண் சிங்கிற்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்த பின்னர், இந்திய மல்யுத்த கூட்டமைப்பு மற்றும் இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரர்களும் நேருக்கு நேர் மோதலில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மல்யுத்த வீரர்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி பிரிஜ் பூஷன் ஷரண் சிங் ராஜினாமா செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். இருப்பினும், விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூரை இரண்டாவது முறையாக சந்தித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்