கால்பந்து உலகக் கோப்பை சேம்பியன் ஆன மெஸ்ஸி, மெர்சலான செயல் ரசிகர்களுக்கிடையே ஆனந்தத்தை அளித்துள்ளது.
2022 ஆம் ஆண்டில் நடந்த கால்பந்து உலகக் கோப்பையை வென்ற அர்ஜெண்டினா அணி நிர்வாகத்தில் இருந்த 35 பேருக்கு, தங்கத்தால் செய்யப்பட்ட ஐபோன்களை பரிசாக வழங்கியுள்ளார் மெஸ்ஸி.
கத்தாரில் நடந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பல்வேறு நாடுகள் கலந்து கொண்டது. இதில், அர்ஜெண்டினா அணி கலந்து கொண்டு கோப்பையைக் கைப்பற்றியது. 36 ஆண்டுகளுக்குப் பிறகு கோப்பையை வென்ற அணிக்கு, இன்ப அதிர்ச்சி அளிக்க மெஸ்ஸி விரும்பியுள்ளார். இதனால், இந்திய ரூபாய் மதிப்பில் 1 கோடியே 73 லட்சம் ரூபாய் அளவில் 35 ஐபோன்களை ஆர்டர் செய்தார்.
மெஸ்ஸி வழங்கிய இந்த போன்கள், வீரர்களின் பெயர்கள், ஜெர்ஸி எண்கள், அணியுடன் பணியாற்றிய நிர்வாகிகளின் பெயர்களுடன், தங்கத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த போன்கள், வீரர்களின் வீடுகளுக்கே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த போன்கள் புதிய மாடலான ஐபோன் 14 ஆவது மாடலைச் சேர்ந்ததாகும். இந்த போன்களை idesign gold நிறுவனத்திடம் மெஸ்ஸி ஆர்டர் அளித்ததாகக் கூறப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…