நேற்று நடந்த அரையிறுதியில் பிரான்ஸுக்கு எதிராக 0-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து பிபா உலகக் கோப்பையில் இருந்து மொரோக்கோ அணி வெளியேறியதை அடுத்து, மொராக்கோ ரசிகர்கள் பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் போலீசாருடன் மோதலில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
மொராக்கோ கொடிகளுடன் இருந்த சுமார் 100 ரசிகர்கள், பிரஸ்ஸல்ஸ் சவுத் ஸ்டேஷன் அருகே கலகத்தை கட்டுப்படுத்தும் உடை அணிந்திருந்த போலீசார் மீது பட்டாசு மற்றும் பிற பொருட்களை வீசினர்.
ரசிகர்கள் குப்பைப் பைகள் மற்றும் அட்டைப் பெட்டிகளை கொளுத்தினர். இதையடுத்து தண்ணீரை பீய்ச்சி அடித்தும், கண்ணீர்ப்புகை குண்டை வீசியும் போலீசார் கூட்டத்தை கலைக்க முயற்சி செய்தனர்.
போலீசார் பல ரசிகர்களை தடுத்து நிறுத்தி, மோதல்கள் அதிகரிக்காத வண்ணம் தடுத்து நிறுத்தியதால், பெரிய சேதம் எதுவும் ஏற்படவில்லை.
இதற்கிடையே நேற்றைய வெற்றியின் மூலம், 2002 ஆம் ஆண்டில் பிரேசிலுக்குப் பிறகு தொடர்ந்து இரண்டாவது முறையாக உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் அணியாக பிரான்ஸ் ஆனது.
இதையடுத்து டிசம்பர் 18 அன்று பிரான்ஸ் அர்ஜென்டினாவை இறுதிப்போட்டியில் எதிர்கொள்கிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…