Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஓய்வை அறிவித்தார் பிரபல சிஎஸ்கே வீரர்..!! திடீர் முடிவு.. பின்னணி என்ன?

Sekar September 14, 2022 & 20:08 [IST]
ஓய்வை அறிவித்தார் பிரபல சிஎஸ்கே வீரர்..!! திடீர் முடிவு.. பின்னணி என்ன?Representative Image.

2015 இல் தனது கடைசி சர்வதேச ஆட்டத்தை விளையாடிய பிறகு, இதுவரை இந்திய அணியில் வாய்ப்பே கிடைக்காத நிலையில், பேட்ஸ்மேன் ராபின் உத்தப்பா, இந்தியாவில் அனைத்து வகையான விளையாட்டுகளிலிருந்தும் ஓய்வு பெற முடிவு செய்துள்ளார். 

இது தொடர்பாக தனது சமூக ஊடக தளங்களில் ஒரு உருக்கமான அறிக்கையையும் வெளியிட்டுள்ளார்.

உத்தப்பா நாட்டிற்காக விளையாடிய தொழில்நுட்ப ரீதியாக சிறந்த பேட்டர்களில் ஒருவர். அவர் 2007 டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் அங்கம் வகித்தார் மற்றும் போட்டியில் பல முக்கியமான ஆட்டங்களை விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், தான் ஓய்வு பெறுவதை சமூக ஊடக தளங்கள் மூலம் அறிவித்த ​​உத்தப்பா, பிசிசிஐ, அவரது மாநில கிரிக்கெட் வாரியம் மற்றும் அவரது முன்னாள் ஐபிஎல் உரிமையாளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

இந்தியாவில் அனைத்து வகையான விளையாட்டுகளிலும் ஓய்வை அறிவித்துள்ளதால், இனி ராபின் உத்தப்பா ஐபிஎல் போட்டிகளிலும் விளையாட மாட்டார். எனினும் இந்த ஓய்வு அறிவிப்பின் மூலம், அவர் வெளிநாடுகளில் நடக்கும் லீக் போட்டிகளில் பங்கேற்க திட்டமிட்டுள்ளாரா என்ற கேள்வி கிரிக்கெட் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்