ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் நிலவும் நிறவெறியை தோலுரித்துக் காட்டியவர் உஸ்மான் கவாஜா. தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், இந்தியா, இங்கிலாந்து என்று ஆஸ்திரேலிய அணி எங்கெல்லாம் திணறியதோ அங்கெல்லாம் சிறப்பாக பேட்டிங் செய்துள்ளார். 2022ஆம் ஆண்டு முதல் மொத்தமாக உஸ்மான் கவாஜா 7 சதங்களை விளாசி அதிக சதம் விளாசியவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
இதனிடையே 2019ஆம் ஆண்டு ஆஷஸ் தொடரின் போது ஆஸ்திரேலிய அணியில் இருந்து 2வது போட்டியுடன் கவாஜா நீக்கப்பட்டிருந்தார். ஆனால் நடப்பு ஆஷஸ் தொடரின் முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸிலேயே கவாஜா சதம் விளாசி ஆஸ்திரேலிய அணியை காப்பாற்றியுள்ளார். அதுமட்டுமல்லாமல் 2ஆம் நாள் முழுக்க பேட்டிங் செய்து அசத்தியுள்ளார். சதம் விளாசிய பின், கவாஜா தனது பேட்டை தூக்கி வீசி கொண்டாடியது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இதன் ஆஸ்திரேலிய வீரர் கவாஜா தனது மகளுடன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது உஸ்மான் கவாஜா, இங்கிலாந்தில் என்னால் ரன்கள் சேர்க்க முடியாது என்று பலரும் விமர்சித்தார்கள். அதன் காரணமாக இன்று எனது சதம் உணர்வுப்பூர்வமானதாக அமைந்துள்ளது. எனது திறமையை நான் யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை என்றாலும், அனைத்து நாடுகளிலும் ரன்கள் சேர்க்க முடியும் என்பதை நிரூபிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் இருந்தது.
சதம் விளாசிய பின் கொண்டாடிய போது, ஏன் பேட்டை தூக்கி வீசினேன் என்று எனக்கே தெரியவில்லை. 2019ஆம் ஆண்டு ஆஷஸ் தொடரின் பாதியில் அணியில் இருந்து நீக்கப்பட்டேன். தற்போது முதல் போட்டியிலேயே சதம் விளாசி இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று தெரிவித்தார். உஸ்மான் கவாஜா 126 ரன்களுடன் களத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…