ஆசிய கோப்பை 2022 கிரிக்கெட் போட்டி தொடரில் சூப்பர் 4 சுற்றுல் இந்தியா மற்றும் ஆஃப்கானிஸ்தான் நாடுகளுக்கிடையே போட்டி நடந்தது. இந்த தொடரில் இந்திய வீரரான விராட் கோலி புதிய சாதனை படைத்துள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு கோலி, வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் கலந்து கொண்டு தனது 70 ஆவது சதத்தை விளாசியிருந்தார். அதற்கு அடுத்த போட்டிகளில் கோலியின் ரசிகர்கள் ஏமாற்றம் அடையும் விதமாகவே, அவரது ஆட்டம் இருந்தது.
கிட்டத்தட்ட 1021 நாள்களுக்குப் பிறகு தனது 71 ஆவது சதத்தை எட்டிப் பிடித்து ரிக்கி பாண்டிங் சாதனையை சமன் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று, ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் மற்றும் இந்தியா நாடுகளுக்கிடையே நடைபெற்ற போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணியை சுலபமாக வீழ்த்தியது இந்தியா. இந்தப் போட்டியில் 121 ரன்களைப் பெற்று கோலி சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…