இந்திய செஸ் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்த் சர்வதேச செஸ் கூட்டமைப்பின் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஐந்து முறை உலக சாம்பியனான ஆனந்த் டிவோர்கோவிச்சின் அணியில் இடம் பெற்றிருந்தார். முன்னதாக இந்த தேர்தலை ஒட்டி தற்போதைய தலைவர் ரஷ்யாவின் டிவோர்கோவிச் அணியில் விஸ்வநாதன் ஆனந்த் இடம் பெற்றிருந்தார்.
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நிலையில், அதன் ஒரு பகுதியாக இந்த தேர்தலும் நடைபெற்றது. இதில் டிவோர்கோவிச் 157 வாக்குகளைப் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அன்ரிய் பரிசோபோல்ட்ஸ் வெறும் 16 வாக்குகளை மட்டுமே பெற்றார், அதே நேரத்தில் செல்லாத வாக்குகளின் எண்ணிக்கை 1 ஆகவும், வாக்களிக்காதவர்கள் எண்ணிக்கை 5 ஆகவும் இருந்தது.
இதையடுத்து டிவோர்கோவிச் மீண்டும் தலைவராகியுள்ள நிலையில், அவரால் முன்னிறுத்தப்பட்ட விஸ்வநாதன் ஆனந்த் துணைத் தலைவராக தேர்வாகியுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…