நேற்று [6 ஜூன், 2023] அன்று துணிகர மூலதன நிறுவனமான Sequoia Capital - அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியா & தென்கிழக்கு ஆசியா என்று மூன்று நிறுவனங்களாக பிரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தந்த பகுதிகளில் நடைபெறும் தொடர் வளர்ச்சி காரணமாக நிறுவனத்தை மூன்றாக பிரிக்க வேண்டிய சூழ்நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியா பிரிவானது 'Peak XV Partners' என மறுபெயரிடப்பட்டுள்ளது. அது மட்டும் இன்றி தற்போது அது முழு சுதந்திரமான நிறுவனமாக செயல்படும். மேலும் இது 13 நிதிகளில் $9.2 பில்லியனைத் தொடர்ந்து நிர்வகிக்கும் மற்றும் Sequoia-ன் கார்பஸில் இருக்கும் $2.5 பில்லியன் முதலீடு செய்யப்படாத மூலதனத்தைப் பயன்படுத்தி ஸ்டார்ட்அப்களில் முதலீடு செய்யும் என்றும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த முக்கிய முடிவை குறித்து செக்வோயா இந்தியாவின் நிர்வாக இயக்குனர் ஷைலேந்திர சிங் கூறுவது, "பீக் XV பார்ட்னர்களாக எங்களுக்கு புதிய ஆரம்பம். நிறுவனம் தற்போதைய தலைமைக் குழுவால் தொடர்ந்து வழிநடத்தப்படும். சமீபத்தில் திரட்டப்பட்ட நிதிகளின் தொகுப்பில் இருந்து தொடர்ந்து முதலீடு செய்யும். புதிய கட்டமைப்பு வரம்பற்ற உலகளாவிய வாய்ப்பைத் திறந்து அதிக மதிப்பை உருவாக்கும்.
எங்கள் போர்ட்ஃபோலியோ மற்றும் நாங்கள் நிர்வகிக்கும் விதத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் உலகளாவிய லட்சியங்கள் மற்றும் உத்திகளுடன் ஒவ்வொரு பகுதிகளில் இருந்தும் நிறுவனங்கள் உருவாகி வருகின்றன" என்று கூறினார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…