Aadhar Card Issue: சமீபத்தில் ஆதார் கார்டு வைத்து மக்களை குழப்பும் செய்திகள் பரவி வருகின்றன. அது என்ன செய்தி, உண்மையா என்று தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.
இந்தியாவில் ஒருவர் எங்க இருக்கிறார், என்ன வேலை செய்கிறார், எவ்ளோ சம்பாதிக்கிறார் போன்ற அனைத்து விவரங்களையும் தெரிந்துகொள்ள நமக்கு வேண்டியது ஒன்றே ஒன்று தான், அது ஆதார் கார்டு. இந்திய மக்களின் ஒட்டு மொத்த செயல்களையும் கண்காணிக்கும் வகையில் ஆதார் கார்டு அமைந்துள்ளது. அந்த வகையில் சமீபத்தில் பான் கார்டுடன் ஆதார் கார்டை இணைக்கும் சூழலுக்கு மத்திய அரசு மக்களை தள்ளியது. அதற்கு பின்பு 5 வயதுக்கு முற்பட்ட குழந்தைகளையும் விட்டு வைக்காமல், அவர்களுக்கு ஆதார் கார்டு எடுக்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது.
இன்று முதல் இந்தியாவில் விற்பனைக்கு வரும் Fire-Bollt Talk 2 ஸ்மார்ட் வாட்ச்! விலை எவ்ளோ தெரியுமா?
குழந்தைகளுக்கு ஆதார் கார்டு
ஒரு குழந்தை 5 வயதுக்கு முற்பட்ட குழந்தைக்கு ஆதார் கார்டு வாங்க பயோமெட்ரிக் கருவி தேவைப்படாது. பெற்றோர் ஒருவரின் ஆதார் கார்டு மற்றும் குழந்தையின் பிறப்பு சான்றிதல் இருந்தால் போதும். ஆதார் கார்டை பெற்றுக்கொள்ளலாம். அந்த குழந்தைக்கு 5 வயது முடிந்த பிறகு பயோமெட்ரிக் கருவியில் பதிவிட்டு மேம்படுத்திக்கொள்ளலாம். இதற்கு நீங்கள் இசேவை மையத்திற்கு சென்று ஆவணங்களை சமர்ப்பித்து பெற்றுக்கொள்ள வேண்டும்.
வெளியிட்ட அறிவிப்பு
சமீப காலமாக மத்திய மற்றும் மணிலா அரசு மக்களை அவர்களின் ஆதார் கார்டை பாதுகாப்பாக பயன்படுத்துமாறு அறிவுறுத்தி வருகிறது. அதே போன்று நேற்று காலை UIDAI அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மக்கள் தங்களின் ஆதார் கார்டு நகலை யாரிடமும் தர வேண்டாம் என எச்சரிக்கைவிடுத்துள்ளது. மேலும் நகலை தவறான வகையில் பயன்படுத்த கூடும் என்று குறிப்பிட்டுள்ளது. அதே போல் பொது இடங்களில் ஆதார் அட்டையை டவுன்லோட் செய்ய வேண்டாம் என கூறியது. கூடுதலாக, மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் நீங்கள் ஆதார் கார்டை பிரௌசிங் சென்டரில் டவுன்லோட் செய்த பிறகு உடனடியாக டெலீட் செய்யமாறு கேட்டுக்கொண்டது. அடுத்த முக்கிய செய்தி என்ன வென்றால், ஆதார் கார்டில் கடைசி நான்கு எண்களை மட்டும் காண்பிக்கும் மாஸ்க் ஆதார் கார்டை மக்கள் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத அப்படியே மாத்திட்டாங்க
இந்த அறிக்கை மூலம் மக்கள் மிகவும் குழப்பத்தில் இருந்தனர். இப்ப ஆதார் கார்டை பயன்படுத்தலாமா வேண்டாமா? இவ்ளோ சிக்கல் இருந்தா பேசாம வேற ஆவணத்தை பயன்படுத்தலாமே போன்ற கேள்விகள் எழுந்து வந்தன. இந்த பரபரப்பான சூழலில் மாலை ஆதார் அமைப்பு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் நாங்கள் காலை வெளியிட்டுள்ள அறிக்கையை திரும்ப பெறுகிறோம். அந்த அறிக்கை மூலம் மத்திய அரசு கூறவிரும்பும் தகவலை மக்கள் தவறாக புரிந்துகொள்ள வாய்ப்புகள் இருப்பதால், காலையில் தெரிவித்ததை திரும்ப பெறுவதாக கூறியது.
ஸ்னாப்சாட்டின் புது அம்சம்...பிரண்ட்ஸ்-அ இன்வைட் பண்ணுங்க...மகிழ்ச்சியா இருங்க!
இதன் மூலம் மக்கள் பெரும் குழப்பத்திற்கு ஆளானார்கள். இப்பொழுது நாங்கள் ஆதார் கார்டை பயன்படுத்தலாமா? வேண்டாமா? ஏதேனும் ஒன்றை தெளிவாக சொல்லுங்கள் என்ற நிலைக்கு தள்ளப்பட்டனர்.
Aadhar card,aadhar card registration,aadhar card correction,aadhar card problems,aadhar card download,aadhaar news today,aadhar card issue,aadhaar card download,aadhaar number,fake aadhar card issue
உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…