தங்கள் காதலுக்கான அடையாளாம் பற்றி நிறைய கதைகளை நாம் கேட்டிருக்கிறோம். அதில் உலக மக்கள் இன்றளவும் நினைவில் கொண்டிருப்பது, ஷாஜஹான் - மும்தாஜ், ரோமியோ - ஜூலியட், லைலா - மஜ்னு இப்படி சொல்லிகிட்டே போகலாம். ஆனால் இதுல நம் நாட்டோட கலைத்திறனை உலகிற்கே கொண்டு சேர்த்த உலகின் அதிசயங்களுள் ஒன்றானது "தாஜ் மஹால்" தான். தன்னுடைய மனைவி மும்தாஜ் மீது ஷாஜஹான் கொண்ட காதலால் கட்டப்பட்ட காவியம்.
இந்த கட்டிடமானது முற்றிலும் இஷ்லாமிய கட்டமைப்புடன் கட்டப்பட்டது. இதை கட்ட ஆரம்பித்தது 1632 AD, சுமார் 16 ஆண்டுகள் கடின உழைப்பிற்கு பின்னர் 1648 AD-யின் போது முடிக்கப்பட்டது. ஏறத்தாழ 42 ஏக்கர் அளவில் 20,000-க்கும் மேல் பணியாளர்களை வைத்து கட்டப்பட்டது. 2020 ஆம் ஆண்டின் படி, இந்த அற்புதம் கட்டப்பட்டதற்கான செலவு 70 பில்லியன் (அதாவது $1 பில்லியன் US டாலர்) என்று கணக்கிடப்பட்டுள்ளது. இப்படி இந்த அதிசயத்தின் பெருமைகளை சொல்லிக் கொண்டே போகலாம்.
இன்றளவும் உலகம் முழுவதிலும் இருந்து மக்கள் சுற்றுலாவிற்கு வந்துக் கொண்டு தான் இருக்கின்றனர். வரும் ஆண்டில் மூன்று நாட்கள் மட்டும் ஷாஜஹான் மற்றும் மும்தாஜ் அவர்களின் அசல் கல்லறையை இலவசமாக நேரில் காணும் வாய்ப்பு கிடைத்துள்ளது. எதனால் இந்த அறிவிப்பு? என்றால், பிப்ரவரி 27, 28 மற்றும் மார்ச் 1 ஆகிய மூன்று நாட்கள் உற்ஸின் நிகழ்வு நடைபெறுகிறது. இதை விட்டால் திரும்ப இந்த வாய்ப்பு கிடைக்கவே கிடைக்காது.
அப்படி என்ன அந்த மூனு நாட்களில் நடக்கிறது? பிப்ரவரி 27, ஞாயிற்றுக்கிழமை ஷாஜகான் உர்ஸின் முதல் நாள் - அன்று மதியம் 2 மணி முதல் மாலை வரை சுற்றுலாப் பயணிகள் ஃபிரீயா பார்க்கலாம். இதே போல் பிப்ரவரி 28, திங்கட்கிழமை அன்று உர்ஸின் மரபுகள் மதியம் 2 மணிக்குப் பிறகு தொடங்கும். அது முடிந்த பிறகு முதல் மாலை வரை கல்லறையை பார்க்கலாம். மார்ச் 1 ஆம் தேதி உர்ஸியின் கடைசி நாள் என்பதால் சூரிய உதயம் முதல் அஸ்தமனம் வரை நேரில் காணலாம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…