அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடைக்கோரி ஒ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளது. மேலும், கட்சியின் உள் விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது என நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி கருத்து தெரிவித்துள்ளார். இதனைதொடர்ந்து ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம். இதனையடுத்து வானகரத்தில் ஈபிஎஸ் ஆதரவாளர்களால் செயற்குழுக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தக்கூட்டத்தில் முக்கிய தீர்மானங்களை நிறைவேற்ற எடப்பாடி பழனிசாமி தரப்பினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மறுபக்கம், ரத்தக்கறை படிந்த காரில் அதிமுக தலைமை அலுவலகம் சென்ற ஓ.பன்னீர்செல்வம், எம்ஜிஆர். ஜெயலலிதா சிலைகளுக்கு மரியாதை செலுத்தினர். பதற்றத்தை தனிக்க அதிமுக அலுவலகத்தை சுற்றி அதிவிரைவுப்படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…