ஓ.பன்னீர்செல்வம் வருகையால் அதிமுக தலைமை அலுவலகத்தில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்ப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது.
அதிமுக ஒற்றைத்தலைமை விவகாரம் உச்சம் பெற்றிருக்க கூடிய நிலையில், கடந்த 23ம்தேதி நடைபெற்ற பொதுக்குழுவின் போது எடப்பாடிக்கு 2,190 பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்திருந்தனர். இதனை தொடர்ந்து, ஓபிஎஸ் ஆதரவு நிலைபாட்டில் இருந்த உறுப்பினர்கள் படிப்படியாக எடப்பாடி பழனிசாமியின் ஆதரவு நிலைக்கு திரும்பினர். நேற்று வரை எடப்பாடிக்கு, 2443 பேர் ஆதரவு தெரிவித்திருந்தனர்.
அதிமுகவின் தலைமைக்காக ஒருங்கிணைப்பாளருக்கு ஆதரவாகச் சிலரும், இணை ஒருங்கிணைப்பாளருக்கு ஆதரவாகச் சிலரும் மாறி மாறி போஸ்டர்களை ஒட்டி வந்தனர்.
இந்நிலையில், இன்று வானகரம் அருகே பொதுக் குழு கூட்டம் நடைபெறும் என்று இபிஎஸ் தரப்பு அறிவித்தது. அதற்கான ஏற்பாடுகளும் ஆரவராவரமாக செய்யப்பட்டுள்ளன. இஏஏஇலையில் அதிமுக தலைமை அலுவலகம் அருகே ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவாளர்கள் ஒருவரை ஒருவர் கற்களை கொண்டும், கட்டைகளை கொண்டும் தக்கிக்கொண்டதால் பரபரப்பு ஏற்ப்பட்டது. மேலும் சாலையில் நிற்கும் கார்களையும் அடித்து நொறுக்கினர். இதனைதொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஓ.பன்னீர்செல்வம் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்துள்ளதால் பரபரப்பு உச்சத்தை எட்டியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…