காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியாகாந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவட்ர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும், மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேஷனல் ஹீராலாடு விவகாரத்தில் ஜூன் 8ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்த நிலையில், தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், “கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள சோனியா காந்தி விரைவில் பூரண குணமடைய வாழ்த்துகிறேன். தொற்றுநோய் இன்னும் நீங்காததால் பொது வாழ்வில் உள்ள அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனக் கூறினார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…