ராஜ்யசபா தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளர்கள் பாஜகவிடம் சென்றுவிடக் கூடாது என்பதற்காக ராஜஸ்தான் எம்.எல்.ஏ-களை ரிசார்ட்டில் தங்கவைக்க மாநில காங்கிரஸ் முடிவெடுத்துள்ளது.
மாநிலங்களவை தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து எதிர்கட்சிகளை சேர்ந்த பிரமுகர்களுடன் குதிரை பேரம் பேசி வரும் பாஜக, அவர்களை தன்வசம் இழுத்து வருவதாக கூறப்படுகிறது. காங்கிரஸிலிருந்து ஏற்கனவே பலர் கட்சியை விட்டு வெளியேறி பாஜகவில் இணைந்து வருகின்றனர். இந்நிலையில் மாநிலங்களவை தேர்தல் நடைபெறுவதால் தங்களின் எம்.எல்.ஏக்கள் ஆதரவு பாஜக வசம் சென்றுவிட கூடாது என்பதற்காக ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தங்களது எம்.எல்.ஏக்களை சமீபத்தில் காங்கிரஸ் மாநாடு நடைபெற்ற உதய்ப்பூர் ரிசார்ட்டில் தங்க வைக்க முடிவு செய்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…