பாஜகவின் குடியரசு தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட திரௌபதி முர்முவுக்கு Z+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஒடிசாவைச் சேர்ந்த பழங்குடியினத் தலைவரான திரௌபதி முர்முவை குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளராக பாஜக செவ்வாய்க்கிழமை அறிவித்தது. இந்த அறிவிப்புக்குப் பிறகு, மத்திய உள்துறை அமைச்சகம், முர்முவின் பாதுகாப்புப் பொறுப்பை ஏற்க, விஐபி பாதுகாப்புக் குழுவை அனுப்புமாறு மத்திய ரிசர்வ் போலீஸ் படைக்கு (CRPF) உத்தரவிட்டது.
ஜார்கண்ட் மாநிலத்தின் முன்னாள் ஆளுநரான முர்மு, ஒடிசாவில் இருந்து முதல் நபராகவும், அவர் தேர்ந்தெடுக்கப்பட்டால், அரசியலமைப்புச் சட்டத்தின் உயர்மட்டப் பதவியை வகிக்கும் முதல் பழங்குடியினப் பெண்மணியாகவும் இருப்பார் என கூறப்படுகிறது. ஜூலை 18-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் யஷ்வந்த் சின்ஹாவை எதிர்கட்சி வேட்பாளராக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…