ஒடிசாவைச் சேர்ந்தவர் பிரபல நடிகை ரேஷ்மிரேகா மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் அடுத்த நயபள்ளி கட்சாஹி சேர்ந்தவர் பிரபல நடிகை ரஷ்மிரேகா ஓஜா. பிரபல தொலைக்காட்சி மூலம் மக்களிடையே தனக்கென தனி இடத்தை தக்க வைத்தவர் ரேஷ்மிரேகா. இந்நிலையில், ரேஷ்மிரேகா சந்தோஷ் பட்ரா என்பவரை காதலித்து வந்துள்ளார்.
இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்து வீடு ஒன்றை வாடகைக்கு பிடித்து வீட்டிற்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் வாங்கி வைத்துள்ளனர். அடுத்த ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொள்ள இருந்த நிலையில், புதிதாக வாடைக்கு எடுக்கப்பட்ட வீட்டில் ஒருமாதம் தங்கியிருந்துள்ளார். இந்நிலையில் நேற்றிரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டு உரிமையாளர் அளித்த தகவலின் பேரில் வந்த ஜகத்சிங்பூர் போலிஸார் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலிஸார் விசாரணை நடந்தி வைத்தனர். போலீசார் நடத்திய அடுத்தகட்ட விசாரணையில் அந்த வீட்டில் இருந்து இரண்டு துப்பாக்கி, கத்தி, மற்றும் வெடி மருந்துகள் மற்றும் கடிதம் ஒன்றையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
இதுகுறித்து போலிஸார் கூறுகையில், “நடிகை ரஷ்மிரேகா ஓஜா எழுதிய தற்கொலை குறிப்பு கடிதத்தில் யாருடைய நிர்பந்தத்திலும் தான் சாகவில்லை. ஆனால், அவரது மரணம் இயற்கையானது அல்ல என்பது தற்கொலைக் குறிப்பு கடிதத்தில் இருந்து தெளிவாக தெரிகிறது. பிரேத பரிசோதனைக்கு பிறகே அவரது மர்ம மரணத்திற்கான காரணம் தெரியவரும்” என்று தெரிவித்துள்ளார்.
ரேஷ்மிரேகாவை அவரது காதலன் கொலை செய்ததாக அவரது தந்தை குற்றச்சாட்டியுள்ள நிலையில், ரேஷ்மிரேகா தற்கொலை செய்துக்கொண்டா ? அல்லது கொலை செய்யப்பட்ட என்ற கோணத்தில் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…